வயதாகும் போது பார்வை குறைகிறதா? பிஸ்தா சாப்பிட்டால் சரியாகுமா? உண்மையை விளக்கும் ஆய்வு!
கண்ணின் விழித்திரையில் உள்ள ஒரு பகுதியே மாகுலா ஆகும், இது கூர்மையான, கவனம் செலுத்தும் பார்வைக்கு காரணமாகிறது. வயதாகும்போது கண்பார்வை மங்கிவிடும் என்று கவலைப்பட வேண்டாம், ஒரு நாளைக்கு இரண்டு கைப்பிடி பிஸ்தா சாப்பிடுங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு நபர் வயதாகும் போது அவரின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும். அது போன்ற காலத்தில் நாம் உடலை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வயதாகும் போது உடற்பயிற்சி செய்து சீரான உணவு முறை சாப்பிட்டு சரியான வாழ்க்கை முறையை பின்பற்றினால் ஆரோக்கியமும் சீராக இருக்கும். எனவே மருத்துவர்கள் வயதானவர்களுக்கு கண்டிப்பான உணவு பழக்கத்தை பரிந்துரை செய்கின்றனர். இந்த சமயத்தில் வயதாகும் போது ஏற்படும் பார்வைக் குறைபாட்டை உணவின் மூல சீராக மாற்றலாம் என ஒரு ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.
ஆய்வு
கண்ணின் விழித்திரையில் உள்ள ஒரு பகுதியே மாகுலா ஆகும், இது கூர்மையான, கவனம் செலுத்தும் பார்வைக்கு காரணமாகிறது. வயதாகும்போது கண்பார்வை மங்கிவிடும் என்று கவலைப்பட வேண்டாம், ஒரு நாளைக்கு இரண்டு கைப்பிடி பிஸ்தா சாப்பிடுங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் வயதாகும்போது பார்வை மங்கலாகலாம் . ஆனால் அதையும் இப்போது சமாளிக்க முடியும் என்று அமெரிக்காவை சேர்ந்த டஃப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயதானவர்களுக்கு பார்வை இழப்புக்கு முக்கிய காரணமான மாகுலர் சிதைவைத் தடுக்க தினமும் இரண்டு கைப்பிடி பிஸ்தா சாப்பிடுவது உதவும் என்று இந்த புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
