நீங்கள் சிங்கிள் ஆக இருக்கிறீர்களா? அப்போ இந்த பிரச்சனை வராது! திருமணம் ஆனவர்களுக்கு வாய்ப்பு அதிகம்! ஆய்வில் தகவல்
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்திலும் மாற்றங்கள் ஏற்படும் என்கிறது புதிய ஆய்வு. திருமணத்திற்குப் பிறகு டிமென்ஷியா உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். தற்போது ஒரு சிலருக்கு திருமணம் ஆவதே பெரும் பாடாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு திருமணம் செய்ய ஒரு சரியான ஆள் கிடைப்பதில்லை. இந்தியாவில் பல ஆண்கள் திருமணமே செய்யாமல் இறக்கின்றனர் என பல அறிக்கைகள் கூறக்கின்றன. ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் டிமென்ஷியா எனும் மறதி நோய் வருகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் இதனை சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை கூருகிறது.
ஆய்வு
திருமணத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படும். உடல் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு, தீவிர மூளை நோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என இந்த ஆய்வின் வழியாக தெரியவந்துள்ளது. இது குறித்து அல்சைமர் அசோசியேஷனின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, திருமணமானவர்களுக்கு டிமென்ஷியா உருவாகும் ஆபத்து அதிகம், இது மூளை தொடர்பான நோயாக இருந்தாலும் கூட இது வர வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.