நள்ளிரவில் திடீரென ஏற்படும் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, சுவாச கோளாறுகளை உடனே குணப்படுத்தும் பானம்!
நள்ளிரவில் திடீரென ஏற்படும் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, சுவாச கோளாறுகளை உடனே குணப்படுத்தும் பானம். இதை மட்டும் பருகிப்பாருங்கள் உடனடி பலன் உறுதி.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
நடு ராத்திரியில் ஏற்படும் திடீர் நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல், வயிறு கட்டு, வயிறு மந்தம், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை என எது வந்தாலும் நீங்கள் உடனடியாகச் பருகவேண்டியது இந்த பானம்தான். அந்தவேளையில் நீங்கள் மருத்துவமனைக்கும் செல்ல முடியாது. மாத்திரைகளும் வாங்கிக்கொண்டு இருக்க முடியாது. எனவே நீங்கள் முதலுதவியாக இந்த பானத்தை மட்டும் பருகினால் போதும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அமில எதிர்ப்பு, நெஞ்செரிச்சல், அல்சர் தொடர்பாக அடிக்கடி ஏற்படும் அமில எதிர்க்களிப்பு, வாயு அட்டாக் ஆகியவை உடனே தீரும். இந்த கஷாயத்தைப் போட்டு 100 மில்லி லிட்டர் அளவுக்குப் பருகவேண்டும்.
தேவையான பொருட்கள்
ஓமம் – ஒரு ஸ்பூன்