மில்லி விநாடிகளில் செயல்பாடு ஏர்பேக் - இருசக்கர வாகனத்தில் புதிய தொழில்நுட்பம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மில்லி விநாடிகளில் செயல்பாடு ஏர்பேக் - இருசக்கர வாகனத்தில் புதிய தொழில்நுட்பம்

மில்லி விநாடிகளில் செயல்பாடு ஏர்பேக் - இருசக்கர வாகனத்தில் புதிய தொழில்நுட்பம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Feb 23, 2022 11:45 AM IST

இருசக்கர வாகனத்தின் மேற்பகுதியில் உள்ள ப்ரேமில் ஏர்பேக் பொருத்தப்பட்டு, மில்லி விநாடிகளில் அது விரிவடையும் விதமாக புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

<p>இருச்சக்கர வாகனத்தில் ஏர்பேக் தொழில்நுட்பம்</p>
<p>இருச்சக்கர வாகனத்தில் ஏர்பேக் தொழில்நுட்பம்</p>

தி பியாக்கியோ குழுமம், வாகன பாதுகாப்பு அமைப்பான ஆட்டோலிவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து சக்தி வாய்ந்த ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள் என இரு சக்கர வாகனங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த ஏர்பேக் உருவாக்கியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இருசக்கர வாகனங்களுக்கான ஏர்பேக் உருவாக்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

"இந்த ஏர்பேக் பயன்பாடு சோதனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் வணிகமயமாக்கப்படவும் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் 2030ஆம் ஆண்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பாதுகாப்பதை நோக்கிய முக்கிய படியாக பார்க்கிறோம்" என்ற ஆட்டோலிவ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மக்கேல் பிராட் தெரிவித்துள்ளார்.

நகரமயமாக்கலின் தாக்கத்தால் உலகம் முழுவதும் சக்தி வாய்ந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போது நிகழ்ந்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்தை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள தனியாக தங்களுக்கென வாகனத்தை வாங்குவதில் பலரும் கவனத்தை செலுத்துகின்றனர்.

எனவே இருசக்கர வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், ஆன்டி ஸ்லிப் ரெகுலேஷன் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் சந்தையில் புதிய இரு சக்கர வாகனங்கள் களமிறக்கப்படுகிறது. 

தானியங்கி அவசர அழைப்பு அமைப்பு, இழுவைக் கட்டுப்பாடு, ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றுடன் எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்த ஏர்பேக் அம்சம், இருசக்கர வாகன பயனாளர்களுக்கும் மேலும் பாதுகாப்பை தரக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏர்பேக் அம்சம் புதிதான விஷயமும் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோண்டா நிறுவனம் ஏர்பேக் பொருத்தப்பட்டு உலகின் முதல் இருசக்கர வாகனம் குறித்த செயல் விளக்கம் அளித்தது. இது பல்வேறு வாகன ஓட்டிகளை பெரிதும் கவர்ந்தது நினைவிருக்கலாம்.

இதைத்தொடர்ந்து தொடர்ந்து தற்போது ஏர்பேக் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் பொருத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளன. விரைவில் இரு சக்கர வாகன பயனிகளின் சாலைப் பயணமும் பாதுகாப்பு அம்சம் நிறைந்ததாக இருக்கும் என நம்பலாம்.