இனி பேச்சு எல்லாம் கிடையாது வீச்சு தான்.. முதல் நாளே விறுவிறுப்பைக் கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இனி பேச்சு எல்லாம் கிடையாது வீச்சு தான்.. முதல் நாளே விறுவிறுப்பைக் கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்..

இனி பேச்சு எல்லாம் கிடையாது வீச்சு தான்.. முதல் நாளே விறுவிறுப்பைக் கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்..

Malavica Natarajan HT Tamil
Dec 23, 2024 07:29 AM IST

வித்யாசமான கதைக்களத்தால் மக்களின் விருப்ப நாடகமாக இருந்த எதிர்நீச்சலின் 2ம் பாகம் இன்று முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

இனி பேச்சு எல்லாம் கிடையாது வீச்சு தான்.. முதல் நாளே விறுவிறுப்பைக் கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்..
இனி பேச்சு எல்லாம் கிடையாது வீச்சு தான்.. முதல் நாளே விறுவிறுப்பைக் கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்..

ஆதி குணசேகரன்

அதிலும், ஆதி குணசேகரனாக நடித்து, வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் அப்லாஸ் வாங்கி இருப்பார் மாரி முத்து. இந்த சீரியலின் மையமே இவர்தான். இவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களும், இவரால் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளும் தான் கதை என்றாலும், அதில் அவர் பேசும் வசனமும் அதன் உச்சரிப்பு மற்றும் முக பாவனையும் அனைவரையும் அசரடித்தது.

பின் இவர் சோசியல் மீடியா மீம் கன்டெண்ட் ஆன பின்பு இந்த சீரியலின் மவுசு கூடியது. பிறகென்ன, மாரிமுத்து இன்று என்ன சொல்லி நம்மை ரசிக்க வைக்கப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் மக்கள் சன் டிவி பக்கம் சென்றுவிடுவர். இந்த நாடகம் பீக்கில் சென்றுகொண்டிருந்த சமயத்திலேயே, அதுவும் இந்தச் சீரியலின் டப்பிங் வேலைகள் சென்று கொண்டிருக்கும் சமயத்திலேயே இவர் உயிரிழந்தார்.

சரிந்த டிஆர்பி

இது, எதிர்நீச்சல் சீரியலுக்கும் பெருத்த அடியை கொடுத்தது. முன்னதாக, மாரிமுத்து இந்த சீரியல் குறித்து பேசுகையில், டைரக்டர் இன்னும் 5 வருடங்களுக்கு எடுக்கும் அளவு இந்த சீரியலின் ஸ்கிரிப்டை வைத்துள்ளார். அந்தக் கதைகளிலும் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினார். ஆனால், விதி அமையவில்லை.

இவரின் இழப்பு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடும்பமாக இருந்தது. இவரது சின்னச் சின்ன உச்சரிப்புகளைக் கண்டு ரசிக்கத் தொடங்கிய இளைஞர்கள் முதல், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்க ஆரம்பித்த பெண்கள் வரை இவரின் இழப்பு பலரையும் பாரமாக்கியது.

மாறிய கதை

இந்த நிலையில் தான், மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அளவு திறமை யாருக்கு இருக்கிறது என்ற கேள்வியுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் தான். ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை மாரிமுத்துவின் நெருங்கிய நண்பரான வேல ராமமூர்த்தி ஏற்று நடித்தார். ஆனால், அவரின் அனைத்து முயற்சிகளும் வீண். மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கொடுத்த அந்த அழுத்தமும், வசீகரமும் வேல ராமமூர்த்தியிடம் மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், சன் டிவி சீரியலில் உச்சத்தில் இருந்த எதிர்நீச்சல் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, ரியலுக்கு பெரும் பின்னடைவும் ஏற்பட்டது. புதிதாக வந்த நடிகருக்காக சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனதால் சீரியலின் டி. ஆர். பியில் கடும் அடி விழுந்தது.

முடிவுக்கு வந்த சீரியல்

இதையடுத்து, கடந்த ஜூன் மாதத்துடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் தான் சன் தொலைக்காட்சி சீரியலின் நேரத்தை மாற்ற சொன்னதாகவும் அதை இயக்குநர் ஏற்க மறுத்த காரணத்தினால் தான் சீரியல் முடிவுக்கு கொண்டு வரபட்டதாகவும் சொல்லப்பட்டது.

எதிர்நீச்சல் 2

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக அந்த சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் அறிவித்திருந்திருந்த நிலையில் சன் டிவியில் இன்று முதல் எதிர்நீச்சல் 2 சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி மக்களை கவர்ந்து வருகின்றன.

சொந்தக் காலில் நிற்கும் பெண்கள்

இந்த ப்ரோமோக்களில் ஆம்பளைக்கு தெரியாம பாத்துகணும், விதவிதமா சமைச்சு போடனும்ன்னு பேச்சே இல்லை. இனிமே வீச்சு தான் எனக் கூறி அனைவரும் அவர்களது சொந்தக் காலில் நிற்பது போல் கதையை எழுதி உள்ளதாகத் தெரிகிறது.

புதுவித கதையம்சத்துடன் ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளதால் இது மக்களை கவருமா என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.