Karthigai deepam: உச்சக்கட்ட ஷாக்கில் ரம்யா..குழப்பத்தை ஏற்படுத்திய போன் கால்..கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: குழப்பத்தை ஏற்படுத்திய போன் கால்.. ஷாக்கான ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா கார்த்திக்காக சமைத்து காத்திருக்க, ரம்யா கார்த்தியை போக விடாமல் தடுக்க, ஒரு பிளான் போட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நழுவிய ரம்யா
அதாவது கார்த்திக், அபிராமியை பார்த்து விட்டு லேட்டாக வீட்டிற்கு வர, தீபா ஷோபாவில் படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். இதனையடுத்து, கார்த்திக் அவளை டிஸ்டர்ப் செய்யாமல், போர்வையை போத்தி விட்டு, ஹாஸ்பிடல் வந்து விடுகிறான். மறுநாள் காலையில், நர்ஸ் ஒருவர் தீபாவுக்கு போன் செய்து, நீங்க சொன்ன மாதிரியே செய்து விட்டதாக சொல்ல, நான் என்ன சொன்னேன் என்று தீபா குழம்புகிறாள்.
இந்த நிலையில், மீனாட்சிக்கும் மைதிலிக்கும் இது ரம்யாவின் நாடகம் என்பது தெரிய வருகிறது. இருந்தாலும், அவர்கள் எதுவும் பேச முடியாமல் இருக்கின்றனர். இதையடுத்து, யாரோ ஒரு பிராடு போன் பண்ணி வேலை பார்த்து விட்டு இருக்காங்க என்று சொல்லி பேச, ரம்யா ஷாக்காகி எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருப்பதாக சொல்லி நழுவிக் கொள்கிறாள்.
நியாபகப்படுத்திய சாமியார்
அதன் பிறகு, கார்த்திக் கோயிலுக்கு வர, அங்கு பெண் சாமியார் வந்து, நீ ஒரு வேண்டுதலை வச்ச நியாபகம் இருக்கா என்று கேட்கிறார். அப்போது கார்த்திக், தனது அம்மா கண் திறக்காமல் உங்களை கும்பிட மாட்டேன் என்று சொல்லிய விஷயம் அவன் நினைவுக்கு வந்தது. இதனையடுத்து அவன் சாமிக்கு நன்றி சொல்ல கிளம்பிச் செல்கிறான்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கார்த்திக் ரம்யாவை சந்தித்து, அந்த சாமியாரை நான் பார்க்கணும் என்று சொல்லி ஷாக் கொடுக்க உண்மையை சொல்வதா? பொய் சொல்வதாக என்று யோசித்தாள். பிறகு சாமியார் இருந்த இடத்திற்கு கார்த்தியை அழைத்து வந்தாள் ரம்யா. சாமியார் இருந்த இடத்திற்கு வந்ததும், கார்த்திக் இந்த இடம் யார் பெயரில் இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறான்.
இதற்கிடையே, ரம்யா அந்த நிலத்தின் ஓனரை பார்த்து பேசி பணத்தை கொடுத்து செட்டப் செய்ததால், நாம் கார்த்தியுடன் சென்றால் மாட்டி கொள்வோம் என்று பயப்பட்டாள். இருந்தாலும் வேறு வழியின்றி கிளம்பி சென்றாள். ஓனர் பெயர் வெங்கையா என்று தெரிய வர, அடுத்து அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்தனர்.
வெங்கையாவும், ரம்யா கார்த்தியுடன் வருவதை பார்த்து விட்டார். ரம்யாவை பார்த்ததும், வாங்க மேடம் என்று கூப்பிட, ரம்யா பதறிவிட்டாள். அந்த நேரம் பார்த்து, கார்த்திக்கு ஒரு போன் வர, அவன் அங்கிருந்து நகர்ந்து சென்றதும், ரம்யா பணத்தை கொடுத்து, எதையும் சொல்லிடாதே என்று வெங்கையாவை தனது வழிக்கு கொண்டு வந்து விட்டாள். இதனால் கார்த்திக் ஏமாற்றத்துடன் ஹாஸ்பிடல் திரும்ப, தீபா கார்த்திக்காக சமையல் செய்து வைத்து காத்திருப்பதாக ரம்யாவிடம் சொன்னாள். இந்த நிலையில் ரம்யா அவள் கார்த்தியை வீட்டிற்கு போக விட கூடாது என்று முடிவெடுத்தாள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்