Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிய ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
Karthigai Deepam Update: கரண்ட் ஷாக் வைக்கும் மயில் வாகனம் திட்டத்தில் எதிர்பாராமல் மட்டிக்கொள்கிறார் ரேவதி. இதில் கார்த்திக் மீது பழி விழுந்த நிலையில் அடுத்த நடக்கப்போவது என்ன என்பது இன்றைய எபிசோட் காட்சிகளாக இடம்பெறவுள்ளன.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மயில் வாகனம் ரோகிணியுடன் ஒன்று சேர அவளுக்கு கரண்ட் ஷாக் அடிக்க ஏற்பாடு செய்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கரண்ட் ஷாக்கில் சிக்கிக்கொள்ளும் ரேவதி
மயில் வாகனம் எல்லாவற்றையும் ரெடி செய்து வைத்து விட்டு ரோகிணிக்கு ஷாக் அடித்தால் காப்பாற்றலாம் என காத்துக் கொண்டிருக்க, எதிர்பாராத திருப்பமாக அதில் ரேவதி சிக்கி கொள்கிறாள். அவளுக்கு கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்படுகிறாள். மாயா, மகேஷ் என எல்லாரும் இருக்கும் போதே ரேவதிக்கு முதலுதவி கொடுக்கும் கார்த்திக் அவளை காப்பாற்றுகிறான்.
ஒயர் வெளியே கிடப்பதை பார்த்த சந்திரகலா, கார்த்திக் வேண்டும் என்றே திட்டம் போட்டு தான் இப்படி செய்ததாக பழி சொல்கிறாள். ஆனால் மயில்வாகனம் நான் தான் இப்படி செய்தேன் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி கோபப்படுகிறாள்.