Karthigai Deepam: ஐஸ்வர்யாவை நடுங்க வைத்த லெட்டர், அபிராமி கிட்னிக்கு நடக்கும் டீலிங் - விறுவிறு கார்த்திகை தீபம்!
கார்த்திக் நான் நீங்க தான் பண்ணீங்கன சொல்லலையே என்று சொல்ல, நீ சொல்றத பார்த்தா எங்களை சொல்ற மாதிரி தான் இருக்கு, ஆனால் இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடியிடம் இருந்து தப்பி வந்த அபிராமி, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அபிராமியை தேடி போன இடத்தில கார்த்திக்கிற்கு ஒரு கடிதம் கிடைக்கிறது, அதில் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையால் வாழ பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொண்டேன் என்று எழுதி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்கிறான்.
நம்ம வீட்டு பிரச்சனை நமக்கு மட்டும் தான் தெரியும், இந்த லெட்டரை வைத்து பார்க்கும் போது, நம்ம குடும்பத்தில் இருக்க யாரோ ஒருவர் தான் அம்மாவை கடத்தி இருக்கணும் என்று சொல்ல, ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் பதறுகின்றனர்.
கார்த்திக் நான் நீங்க தான் பண்ணீங்கனு சொல்லலையே என்று சொல்ல, நீ சொல்றத பார்த்தா எங்களை சொல்ற மாதிரி தான் இருக்கு, ஆனால் இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கின்றனர்.
அடுத்து கார்த்திக் இப்போ யார் கடத்தினாங்க என்பது முக்கியம் இல்ல, அம்மாவை கண்டுபிடிக்கணும் அதுதான் முக்கியம் என்று சொல்கிறான். மறுபக்கம் அபிராமி ஹாஸ்பிட்டலில் இருக்க, டாக்டர் இவங்க சொந்தகாரங்க யாராவது வந்தார்களா என்று கேட்கிறார். அதற்கு பதிலாக, யாரும் வரவில்லை என்று சொல்கின்றனர்.
இதனையடுத்து டாக்டர் யாரோ ஒருவருக்கு போன் போட்டு, கிட்னி கேட்டு இருந்தீங்களே. இப்போ இருக்கு; 20 லட்சம் ருபாய் செலவாகும் என்று டீல் பேச அவர்களும் சம்மதம் சொல்கின்றனர்.
உடனே டாக்டர் ஒருவர் அபிராமிக்கு ஆபரேஷன் செய்து கிட்னியை எடுக்க வருகிறார். ரவுடிகள் ஒரு பக்கம், கார்த்திக் ஒரு பக்கம் என்று அபிராமியை தேடி கொண்டிருக்கும் நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கார்த்திக் போலீசுடன் அபிராமியை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு கிளம்பி வந்தான். அங்கே அபிராமி தண்ணீர் வேண்டும் என்று சொல்லி கேட்க, ரவுடி ஒருவன் கட்டையை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுக்க அனுமதித்தான். இதற்கிடையே அபிராமி அவனை கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள்.
இதனையடுத்து மெய்ன் ரவுடிக்கு இந்த விஷயம் தெரிய வர, அவனும் அபிராமியை துரத்தி வருகிறான். இதனைதொடர்ந்து போலீசுடன் குடோனுக்கு வந்த கார்த்திக் அபிராமியை தேடி பார்க்கிறான். அங்கு அபிராமி இல்லாத நிலையில், அங்கு இருக்கும் தடயங்களை வைத்து இப்போ தான் தப்பி சென்றிருக்கணும் என்று முடிவெடுத்து அபிராமியை தேடுகின்றனர்.
மறுபக்கம் தப்பி ஓடி வரும் அபிராமி ரோட்டை அடைந்து விட எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று அவளை இடித்து விடுகிறது. இதையடுத்து விபத்தில் சிக்கி அவள் சரிந்து விழுகிறாள். உடனே அங்கிருந்தவர்கள் அபிராமியை ஹாஸ்பிடலுக்கு ஏற்றி அனுப்ப, அந்த வழியாக வரும் ஆட்டோவை கை போட்டு நிறுத்துகின்றனர்.
அந்த ஆட்டோ ட்ரைவர் கார்த்திக் பாட வைத்த துப்புரவு பணியாளர் பெண் ராணியின் கணவர்தான். ஆனால் அவருக்கு அபிராமியை பற்றி தெரியாத காரணத்தால் ஹாஸ்பிடலில் கொண்டு வந்து அட்மிட் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்