Karthigai deepam: சாமியார் கொடுத்த சாபம்.. விஷத்தால் நெஞ்செரிச்சல்.. கதறி துடித்த ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: சாமியார் கொடுத்த சாபம்.. விஷத்தால் நெஞ்செரிச்சல்.. கதறி துடித்த ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai deepam: சாமியார் கொடுத்த சாபம்.. விஷத்தால் நெஞ்செரிச்சல்.. கதறி துடித்த ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 12, 2024 03:52 PM IST

Karthigai deepam: அபிராமியை காப்பாற்ற தீபாவுக்கு கிடைத்த வழி.. திட்டம் போட்டு சூனியம் வைத்து கொண்ட ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai deepam: சாமியார் கொடுத்த சாபம்.. விஷத்தால் நெஞ்செரிச்சல்.. கதறி துடித்த ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: சாமியார் கொடுத்த சாபம்.. விஷத்தால் நெஞ்செரிச்சல்.. கதறி துடித்த ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரம்யா பேரரில் உருட்டி விடப்பட, கார்த்திக் அவளை காப்பாற்றிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

தீபாவை நம்ப வைத்த ரம்யா 

அதாவது, கார்த்திக், ரம்யாவுடன் தீபா இருக்கும் இடத்திற்கு வர அங்கு தீபா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அவளை எழுப்ப, தீபா எனக்கு என்னாச்சு, இங்க என்ன நடந்தது? என்று கேட்டாள். கார்த்திக், உனக்கு ரம்யா பரிகாரம் செய்ததாக சொல்ல, தீபா ரம்யாவிடம், நீ எதுக்கு எனக்கு பரிகாரம் செய்தாய் என்று கோபப்படுகிறாள். பிறகு நீ தான் என்ன பண்ண சொன்ன என்று சொல்லி, தீபாவை ரம்யா நம்ப வைக்கிறாள்.

அதன் பிறகு, இவர்கள் கிளம்பி வீட்டிற்கு வருகின்றனர், தீபா கோயிலுக்கு வந்து பெண் சாமியார் ஒருவரை சந்திக்கிறாள். இந்த மாதிரி பரிகாரம் செய்ய போய் இருந்தேன், ஆனால் என்னால் பரிகாரம் செய்ய முடியவில்லை என்று அவரிடம் சொல்ல, சாமியாரோ, நான் உன்னை தடுத்தேன் என்று சொல்கிறார். எதுக்கு என்னை தடுத்தீங்க என்று கேட்க, உங்க அத்தையை காப்பாற்றும் சக்தி உன்னிடமே  இருக்கிறது என்று அந்த சாமியார் சொல்கிறார். இதையடுத்து, தீபா குழப்பம் அடைகிறாள்.

தடுத்த நிறுத்த ரம்யா போட்ட ஸ்கெட்ச்

தொடர்ந்து என்ன சொல்றீங்க சாமி என்று கேட்க, ஆமாம் உன்னுடைய குரலால் மனமுருகி பாட்டு பாடி, அந்த கலைவாணி மனதை குளிர வை.. அவ உன்னுடைய அத்தையை காப்பாற்றி கொடுப்பாள் என்று சொல்கிறாள். இதையடுத்து, தீபா பாட முடிவெடுக்க, இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ரம்யா, தீபா பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.

உடனே தனது அடியாளுக்கு போன் செய்து, விஷத்தை கொண்டு வர சொல்லி, பானகத்தில் கலந்து கொடுத்து தீபாவை குடிக்க சொன்னால், அவளால் பாட முடியாமல் போய் விடும் என்று திட்டம் போடுகிறாள். அதே போல் தீபாவிற்கு விஷத்தை கலந்து கொடுக்க, தீபா குடிக்க போகும் சமயத்தில், அங்கு வந்த பெண் சாமியார், தீபா எனக்கு என்று கேட்டு, பானகத்தை வாங்கி கொண்டு தீபாவை பாடச் சொல்லி அனுப்பி வைக்கிறாள்.

அந்த பெண் சாமியார் பானகத்தை குடிக்க, குடிக்க ரம்யாவுக்கு நெஞ்சு எரிய ஆரம்பிக்கிறது. இதையடுத்து அவள் பயந்து நடுங்கி ஓடினாள். தீபா, கலைவாணியை குளிர வைக்க பாட்டு பாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: