Karthigai Deepam: கார்த்திக்கிற்கு காய் நகர்த்தும் ரம்யா.. கைமாறிய புடவை.. கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கார்த்திக்கிற்கு காய் நகர்த்தும் ரம்யா.. கைமாறிய புடவை.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: கார்த்திக்கிற்கு காய் நகர்த்தும் ரம்யா.. கைமாறிய புடவை.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 05, 2024 01:50 PM IST

Karthigai Deepam: ரம்யாவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. மீனாட்சியிடம் சிக்க போகும் ரம்யா? கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: கார்த்திக்கிற்கு காய் நகர்த்தும் ரம்யா.. கைமாறிய புடவை.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திக்கிற்கு காய் நகர்த்தும் ரம்யா.. கைமாறிய புடவை.. கார்த்திகை தீபம் அப்டேட்!

ரம்யா ரூமில் மீனாட்சி

அதாவது, மீனாட்சி ரம்யா ரூமுக்குள் செல்ல, அங்கு ஆங்கரில் ஒரு சட்டை தொங்குவதை பார்த்து, இது அவரோட சட்டையா? உன் காதல் கதையை தீபா சொல்லி இருக்கா என்று கலாய்க்கிறாள். அதன் பிறகு, ரம்யா இவர்களுக்கு தெரியாமல் கோயிலில் இருந்து வாங்கி வந்த புடவையை எடுத்து விடுகிறாள். அந்த புடவை இருக்கும் பையிலேயே மீனாட்சியின் பர்ஸ்சும் சிக்கி கொள்கிறது.

இதனை தொடர்ந்து அபிராமியும், மீனாட்சியும் புடவையை மறந்து கிளம்பி விடுகின்றனர். கார்த்திக் கோயிலில் தீபாவுக்காக பதிலாக பரிகார பூஜையை முடித்து விட்டு வருகிறான். அப்போது தன்னுடைய மோதிரத்தை கழட்டி கொடுத்தவரை பார்க்க நேருகிறது. அவரோ, மோதிரத்தை ரம்யா திரும்பி வாங்கிட்டாங்க. அதன் பிறகு பணத்தை கொடுத்தாங்க என்று சொல்ல, கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து மோதிரத்தை கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டான். 

கோபம் இல்லை கார்த்திக் 

ரம்யா உங்க மேல எனக்கு கோபம் இல்ல, அந்த மோதிரம் உங்க கிட்ட இருக்கனும்னு நினைச்சேன். அவ்வளவுதான் என்று சொல்கிறாள். நாளைக்கு மோதிரத்தை உங்கக்கிட்ட திரும்பி கொடுக்கிறேன் என்று சொல்லி போனையும் வைக்கிறாள்.

அடுத்து அபிராமிக்கும், மீனாட்சிக்கும் புடவையை மறந்துட்டு வந்த விஷயம் நினைவுக்கு வர, மீனாட்சி மட்டும் தனியாக ரம்யா வீட்டிற்கு திரும்பி வருகிறாள். இங்கே வீட்டில் ரம்யா கார்த்தியை நினைத்து கொண்டு, அந்த புடவையை கட்டி பார்த்து கொண்டிருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன? 

தீபாவை கொல்ல வந்த ரவுடி கோயில் அருகே போன் பேசி கொண்டே நடந்து வர, எதிரில் மீனாட்சியும் போனில் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் இருவரும் மோதி கொண்டனர். இதையடுத்து மீனாட்சிக்கும், ரவுடிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் போலீசை கூப்பிட்டு அவனை பிடித்து கொடுக்கப்பட்டான்.

அதன் பிறகு, அந்த ரவுடி ரம்யாவுக்கு போன் செய்து, தான் கைதான விஷயத்தை சொல்ல, அவள் அவனை வெளியே எடுக்க ஸ்டேஷனுக்கு கிளம்பினாள். மறுபக்கம் கார்த்திக், ஜூஸில் மருந்து கலந்தது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று கம்பளைண்ட் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்தான். 

அப்போது கார்த்தியின் நண்பரான இன்ஸ்பெக்டர் உங்க அண்ணி கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டானு கைது பண்ணி இருக்கோம். அவனை விசாரிக்கும் போது அவன் கிட்ட கத்தி இருந்தது. தீபாவை குத்த வந்தது இவனா பாரு என்று காட்ட கார்த்திக், இவன் தான் என்று அடையாளம் காட்டினான். 

கார்த்தியிடம் சிக்கிய ரம்யா:

அதன் பிறகு ரம்யாவும் ஸ்டேஷனுக்கு வர கார்திக்கியிடம் சிக்கி கொள்கிறாள். எதுக்கு இங்க வந்தீங்க என்று விசாரிக்க, ரம்யா ஒருத்தன் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பதாக கம்பளைண்ட் கொடுக்க வந்ததாக சொன்னான். பிறகு இன்ஸ்பெக்டர் இவனா பாருங்க என்று காட்ட, ரம்யாவும் ஆமாம் என்று தலையாட்டி அங்கிருந்து கிளம்பி வந்தாள்.அதை தொடர்ந்து அபிராமியும் மீனாட்சியும் வீட்டிற்கு வர ரம்யா அவர்களை வரவேற்றாள். 

பிறகு அப்பாவிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்க, அவர் கார்த்திக்கு முதல் முதலாக என் பொண்ணை தான் பொண்ணு பார்க்க வந்தீங்க என்று சொன்னார். இதைக்கேட்ட அபிராமி ஷாக் ஆனாள். இதையடுத்து ரம்யா அப்பா சொன்னதை மனசுல வச்சிக்காதீங்க, கார்த்திக்கிற்கும், தீபாவிற்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் சொன்னாள்

அபிராமியும் மீனாட்சியும் கோயிலில் இருந்து கொண்டு வந்த சாமி புடவையை இங்கேயே மறந்து வைத்து விட்டு கிளம்பி விட, ரம்யா அந்த புடவையை எடுத்து வைத்து கொண்டாள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: