Karthigai Deepam: ‘ரம்யா காதலனாக மாறும் கார்த்திக்.. விவரம் தெரியாமல் விளையாடும் தீபா’ - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: காதலனாக கார்த்திக்கை அறிமுகம் செய்ய போகும் ரியா.. தீபாவுக்கு தெரிய வருமா உண்மை? கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா ரம்யா வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தீபாவிடம் முறையிட்ட அப்பா:
ரம்யாவின் அப்பா, அவளுக்காக மாப்பிள்ளை பார்த்து, ஒரு 15 ப்ரொபைல் வந்திருக்கு… இதில் ஏதாவது ஒன்றை செலக்ட் பண்ண சொல்லு என்று சொல்கிறார். இதைக்கேட்ட தீபா, ரம்யாவிடம் பொறுமையாக எடுத்து பேசுவதாகச் சொல்லி, வீட்டிற்கு கிளம்பி வருகிறாள்.
இங்கே அபிராமி வீட்டில், ரியா பெயருக்கு ஒரு கொரியர் வர, அதை பிரித்து பார்க்கும் போது, அது ஆனந்த் ரியாவின் கல்யாண போட்டோ என்பது தெரிய வருகிறது. ரியா இதை வீட்டு ஹாலில் மாட்ட வேண்டும் என்று சொல்ல, அபிராமி, அருணாச்சலம் ஆகியோர் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் ரியாவோ மாட்டியே ஆக வேண்டும் என்று வாக்குவாதம் செய்ய, அந்த சம்யம் தீபா வீட்டிற்குள் நுழைகிறாள்.
முடிவில் உறுதி
இங்கே நடப்பதை தெரிந்து கொண்ட தீபா, அதான் மாட்ட வேண்டாம்னு சொல்றாங்கல என்று பேச, ரியா அப்போதும் தனது முடிவில் உறுதியாக இருந்து அடம்பிடிக்கிறாள்.
இதையடுத்து தீபா அந்த போட்டோவை பிடுங்கி கொண்டு போய், வெளியில் போட்டு உடைக்கிறாள். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரியா இதை விட பெரிய போட்டோவை நான் மாட்டி காட்டுறேன் என்று சவால் விடுகிறாள்.
அடுத்து கார்த்திக் வர, தீபா தன்னுடைய ஃப்ரண்ட் அம்மு வீட்டிற்கு சென்றிருந்ததாக சொல்கிறாள், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்; 15 ப்ரொபைல் வந்திருக்கு, இதுல ஏதாவது பெஸ்ட்டா சொல்லுங்க என்று அவனிடம் கேட்க, அவன் மற்றவங்க வாழ்க்கைக்கு நான் எப்படி மாப்பிள்ளை பார்க்க முடியும் என்று சொல்லி, நோ சொல்கிறான்.
இந்த நேரம் பார்த்து ரம்யா போன் செய்ய, தீபா போனை எடுத்து, அம்மு என்று இன்னொரு பெயரை சொல்லி பேசுகிறாள். கார்த்திக்கிடம் என் ஃப்ரண்ட் கிட்ட பேசுங்க என்று போனை கொடுக்க, கார்த்திக் வேண்டாம் என்று மறுக்க, அவர் கூச்சப்படுகிறார் என்று சொல்லி விடுகிறாள் தீபா.
மறுநாள் தீபாவும், ரம்யாவும் கோயிலில் சந்திக்க, தீபா கல்யாண பேச்சை எடுக்கிறாள். ஆனால், ரம்யா அமைதியாகவே நிற்கிறாள், இதனால் தீபா நீ யாரையாவது லவ் பண்ணுறியா என்று கேட்க, ரம்யா ஆமாம் என்று கூறுகிறாள். யார் என்று கேட்ட போது, என்னுடைய ஆபீஸ் எம்பிளாயி ஒருத்தரை லவ் பண்றேன் என்று சொல்லி, கார்த்திக்கை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்கிறாள்.
இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா, ஒருவேளை அந்த நபர் கார்த்தியாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்