Karthigai deepam: மீண்டும் மீண்டுமா..?..தீபா கேட்ட கேள்வி, ட்விஸ்ட் வைத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மீண்டும் மீண்டுமா..?..தீபா கேட்ட கேள்வி, ட்விஸ்ட் வைத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: மீண்டும் மீண்டுமா..?..தீபா கேட்ட கேள்வி, ட்விஸ்ட் வைத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 29, 2024 11:05 AM IST

Karthigai deepam: “தீபா நான் 12வது ஃபெயில் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக் சிரிக்கிறான். அதன் பிறகு எனக்கு, உங்கள பிடிச்சிருக்கு..” - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: மீண்டும் மீண்டுமா..?..தீபா கேட்ட கேள்வி, ட்விஸ்ட் வைத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: மீண்டும் மீண்டுமா..?..தீபா கேட்ட கேள்வி, ட்விஸ்ட் வைத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

மீண்டும் முதலில் இருந்து

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கடந்த எபிசோடில் கார்த்திக், தீபாவிற்கு ஆரம்பத்தில் இருந்து எல்லா சடங்குகளையும் செய்து, திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

அதாவது, தீபாவை பெண் பார்க்க கார்த்திக் குடும்பத்தினர், அவளது வீட்டிற்கு வருகின்றனர். தீபா எல்லாருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்கிறாள். அபிராமி பொண்ணு லட்சணமா இருக்கா என்று சொல்கிறாள். அதன் பிறகு பொண்ணு நல்லா பாடுவான்னு சொன்னாங்க என்று மீனாட்சி கேட்க, மைதிலி, ஆமா கர்நாடிக் மியூசிக் நல்லா பாடுவா; நிறைய கச்சேரில பாடி, பரிசுயெல்லாம் வாங்கியிருக்கா என்று சொன்னாள். இதையடுத்து, ஒரு பாட்டு பாட சொல்லுங்க என்று சொன்னதும் தீபா பாட்டு பாடுகிறாள்.

ஓகே சொன்ன கார்த்திக்

அதன் பிறகு பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு என்று அபிராமி குடும்பத்தினர் சொல்ல, தீபா ரம்யாவை இடிக்கிறாள். இதையடுத்து ரம்யா, பொண்ணுக்கு மாப்பிள்ளை கிட்ட தனியா பேசணுமாம் என்று சொல்கிறாள். 

அதைத்தொடர்ந்து கார்த்திக், தீபா தனியாக பேச போகிறார்கள். கார்த்திக், நான் எம்பிஏ படிச்சிருக்கேன் என்று சொன்னதும், தீபா நான் 12வது ஃபெயில் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக் சிரிக்கிறான். அதன் பிறகு எனக்கு, உங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா என்று தீபா கேட்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக், என் அம்மா கிட்ட சொல்றேன் என்று கீழே இறங்கி வருகிறான்.

அதன் பிறகு, அபிராமியிடம் உங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கா என்று கேட்க, அவள் எனக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னதும், கார்த்திக் எனக்கும் பிடிச்சிருக்கு என்று சொல்கிறான். பிறகு தட்டு மாற்றி, நிச்சயம் முடித்து, கல்யாணத்துக்கு நாள் குறிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

 

தீபா, ஒரு பெண் சாமியார்தான் என்னை காட்டு அம்மன் கோயிலுக்கு கூட்டிட்டு போனாங்க, அவங்க என் கையில் ஒரு கயிறை கட்டி விட்ட பிறகுதான், எனக்குள்ள ஒரு சக்தி வந்தது, என்னை காப்பாத்துனது கூட அவங்கதான் என்று சொன்னாள். 

அடுத்து, அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து, அந்த சாமியாரை சந்தித்து, கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுக்க சொல்ல, முதலில் யோசித்த அவர், பிறகு ஒரு தேதியை குறித்து கொடுத்தார். இதை தர்மலிங்கத்திடம் சொன்ன தீபா, உங்க ஜோசியர் அப்படி சொன்னாரு, எங்க ஜோசியர் கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுத்து இருக்காரு என்றாள். 

அதன் பிறகு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி ஒருவர் வெங்கையா வீட்டிற்கு வந்து, நான்தான் ரம்யா நம்பீசன் எனக்கு இன்னும் ரெண்டு நாள் உங்க நிலம் வேண்டும் என்று கேட்ட நிலையில் இவன், நீங்க யார்? நீங்க ரம்யா நம்பீசன் இல்லையே என்று வெங்கையா பேசிக்கொண்டிருந்த போதே, கார்த்திக் என்ட்ரி கொடுத்து, நடந்ததை சொல்ல சொல்லி கேட்டான். 

அதற்கு வெங்கையா, ஒருத்தவங்க போன் மூலமாக நிலத்தை கேட்டாங்க, பணத்தையும் கொடுத்தாங்க, அதனால் தான் இப்படி பண்ணேன் என்று சொன்னான். கார்த்திக் அந்த நம்பருக்கு போன் போட சொல்ல, அது ரம்யாவின் இன்னொரு நம்பர் என்று தெரிய வந்தது. 

சதி செய்ய கூட்டு சேரும் ரம்யா!

ரம்யா போனை எடுத்தாள். கார்த்திக், நான் கார்த்திக் பேசுறேன் என்று சொன்னதும், போனை கட் செய்து, சிம்மை கழட்டி உடைத்து எறிந்தாள் ரம்யா. அடுத்து, பெயிலில் வந்த ரியாவை சந்தித்த ரம்யா, உனக்கு ஆனந்த்தோட பொண்டாட்டி ஆகணும், எனக்கு கார்த்திக்கோட பொண்டாட்டி ஆகணும். ரெண்டு பேரும் சேர்ந்து, அந்த வீட்டிற்குள் நுழைவோம் என்று சொல்லி கூட்டு சேர்ந்தாள். 

இதற்கிடையே தீபா, கார்த்திக்கிடம், உங்களுக்கு என் மேலே காதல் இருக்கா? இல்ல, அம்மா சொல்லியதால் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்களா என்று கேட்டாள். அதற்கு கார்த்திக், அம்மா சொல்லி தான் ஓகே சொன்னேன் என்று சொன்னான். அதனை தொடர்ந்து தீபா, கல்யாணத்துக்குள்ள என் மேலே உங்களுக்கு காதல் வர வைக்கிறேன் என்று சவால் விட்டாள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.