வெளிநாட்டுக்கு கைமாறும் கலசம்.. சேட்டு வீட்டுக்குள் வந்த நாகம்;கார்த்திக் செய்யப்போவது என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்
மறுபக்கம் சேட்டு வீட்டிற்குள் புகுந்த நாகம் ஒன்று குழந்தையை சீண்டி விட, சேட்டுவின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் மற்றும் ரேவதி கலசத்தை கண்டுபிடிக்க தண்ணி கேன் போடும் கம்பெனிக்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரவுடிகளை தேடி வந்த கார்த்திக்
அதாவது, கார்த்திக் அந்த வண்டி குறித்து அங்கிருந்தவரிடம் விசாரிக்க, என் ஃப்ரண்ட் எடுத்துட்டு போய் இருந்தான் என்று அவர் சொல்ல அந்த நபருக்கும் ரவுடிகளுக்கு சம்மந்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான். இதை தொடர்ந்து அந்த ரவுடிகளை தேடி வருகிறான்.
மறுபக்கம் சேட்டு வீட்டிற்குள் புகுந்த நாகம் ஒன்று குழந்தையை சீண்டி விட, சேட்டுவின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். இங்கே கார்த்திக் ரவுடிகளை கண்டுபிடித்து அவர்களை அடித்து விசாரிக்க, கலசத்தை விற்று விட்டதாக சொல்கிறார்கள்.
கை வருமா கலசம்
இதையடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி இந்த பக்கமாக வர, குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர்; சேட்டுவின் மனைவி போன் போட்டு அந்த கலசத்தால் தான் எல்லா பிரச்சினையும் என பேச, கார்த்திக் கலசம் என்ற வார்த்தையை கேட்டு விட்டு அந்த பெண்ணை விசாரிக்கிறான்.
சேட்டுவின் மனைவி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல, அந்த கலசத்தை தேடி தான் நாங்க வந்தோம் என கார்த்திக் கூறினான். அந்த பெண்மணி சேட்டுவை சந்தித்து கலசத்தை வாங்கிக்கோங்க என்று சொல்கிறாள்.
ஆனால் சேட்டு ஒரு குடோனில் வெளிநாட்டு நபர்களை சந்தித்து, கலசத்தை கொடுத்து பணத்தை வாங்கி கொண்டு கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சந்திரகலா கார்த்தி தான் கலசத்தை எடுத்து இருக்க வேண்டும் என அவன் மீது பழி போட்டாள். அதுமட்டுமின்றி ஆதாரமாக கார்த்திக் மற்றும் சிவனாண்டி என இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை காட்ட, சாமுண்டீஸ்வரி அதைப் பார்த்து கோபப்பட, கார்த்திக் சிவனாண்டி தான் பேச வேண்டும் என கூப்பிட்டு இருந்ததாக உண்மையை கூறினான்.
இதற்கிடையே ரேவதி, கார்த்தி கண்டிப்பா இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என அவனுக்கு சப்போர்ட் செய்து பேசினாள்; அது மட்டுமின்றி, இதுக்கு பின்னாடி ஏதோ நடந்திருக்கு; அது என்னன்னு கண்டுபிடிச்சு இந்த குடும்பத்தோட கௌரவத்தை காப்பாற்ற வேண்டியது உங்க கையில தான் இருக்கு கார்த்தியிடம் சொல்ல, அவன் கலசம் காணாமல் போனது குறித்து அலச தொடங்குகிறான்.
கலசத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் சென்ற வழியில், விபூதி குங்குமம் சிதறி கிடப்பதை கவனித்தான். வண்டி ஒன்று நின்று கொண்டிருந்த தடயத்தையும் நோட் செய்தான். அதை வைத்து, வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர் தான் இதை திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான்.
அதன் பிறகு, அக்கம் பக்கத்தில், வெளியில் ஏதாவது வண்டி நின்று கொண்டு இருந்ததா என்று கவனிக்க, தண்ணி கேன் போடும் வண்டி காத்துக் கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது. மறுபக்கம் கலசத்தை எடுத்து வந்த ரவுடிகள் இருவர் அதை நகைக்கடை சேட்டு ஒருவரிடம் கொடுத்து பணம் கேட்க, பத்தாயிரம் ரூபாய் தான் கொடுக்க முடியும் என பணம் கொடுத்து அனுப்பினார்; இந்த கலசத்த பாத்தா ஏதோ தெய்வீக கலசம் மாதிரி இருக்கு என சேட்டு மனைவி சொல்ல, அதெல்லாம் ஒன்னும் கிடையாது; இதை வெளியில கொடுத்தா ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் போகும் என சேட்டு கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்