Karthigai deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 26, 2024 02:45 PM IST

Karthigai deepam: ரியா ரியா என அழைத்தபடியே ராஜேஸ்வரி உள்ளே வர, கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள் ரியா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!

உப்பின் மீது அங்கபிரதர்சனம்

அதாவது, தீபா சாமியாரை பார்க்கணும், அத்தை சரியாக பரிகாரம் பண்ணனும் என்று சொன்னபடியே செல்கிறாள். ரம்யாவும் தனது வார்த்தை ஜாலத்தால், தீபாவை தீர்த்து கட்டும் திட்டத்துடன் அழைத்துச் செல்கிறாள். மறுபக்கம் அருண், ஐஸ்வர்யாவை கோயிலுக்கு அழைத்து, நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியே, இப்போ அதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்லி அழைத்து வந்து, உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான்.

வசமாக சிக்கி கொண்ட ஐஸ்வர்யா, பண்ண முடியாது என்று மறுக்க முடியாமல் தவிக்கிறாள். ஐஸ்வர்யா முதல் பரிகாரத்தை முடித்ததும் அருண், சாமி அடுத்த பரிகாரத்தை சொல்லுங்க என்று சொல்கிறான். சாமியார் ஐஸ்வர்யாவை கையை காட்ட சொல்லி, அக்கினி சட்டியை வைத்து வைக்க, அவளோ அலறுகிறாள். 

அடுத்ததாக ரியாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு, ராஜேஸ்வரி மார்க்கெட் சென்றிருக்க, திரும்பி வரும் போது அவள் போலீசுடன் வந்திறங்கினாள். இதனையடுத்து, கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறாள். ரியா ரியா என அழைத்தபடியே ராஜேஸ்வரி உள்ளே வர, கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள் ரியா! இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

ஐஸ்வர்யா ரியாவிடம் இருக்கும் வைரத்தில் பங்கு கேட்க, ரியாவோ, நீ நான் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா, நீ கேக்குற பங்கை கொடுப்பதோடு, உங்க அம்மாவுக்கு கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் மற்றும் ஒரு கம்பெனியையும் வாங்கி தருவேன் என்று சொன்னாள்.  இதைக்கேட்டு ஐஸ்வர்யா பேராசையில் கொடைக்கானலில் எஸ்டேட்டா என்று வாயை பிளக்க, அவளுக்கு பளாரென அறை விழுகிறது. யாரென்று பார்த்தால் அருண்.

அவன், எங்க அம்மா அங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, நீ சொத்தை பத்தி பேசிட்டு இருக்க, யார் கூட டி பேசிட்டு இருக்க என்று போனை பிடிங்கி பார்த்தான். இதைப்பார்த்த ஐஸ்வர்யா பதறினாள். ரியா, ராஜேஸ்வரி போனில் இருந்து போன் செய்ததால், அம்மாவிடம் தான் பேசிட்டு இருந்ததாக சொல்லி சமாளித்தாள்.

சேலையை உடுத்திய தீபா

இதை தொடர்ந்து தீபா பரிகாரம் செய்ய ஏலத்தில் வாங்கி வந்த அம்மன் சேலையை கட்டிக்கொண்டு, சாமியாரை பார்க்க கிளம்பினாள். அப்போது, மீனாட்சி உனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருவது போல் கனவு கண்டதாக சொல்லி தடுக்க முயற்சிக்க, கனவு தானே அக்கா, எனக்கு ஒன்னும் ஆகாது என்று கிளம்பிச் சென்றாள். அம்மன் புடவையில் வரும் தீபாவை பார்த்து, ரம்யா அதிர்ச்சி அடைந்தாள். 

இந்த புடவையை மாற்ற வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அவள், வீட்ல யார் கிட்டயும் எதுவும் சொல்லலையே என்று கேட்க, அவள் கார்த்திக்கிடம் சொன்னதாக சொன்னாள். இதைகேட்ட ரம்யா மேலும் ஷாக் ஆனாள். அப்போது தீபா, கார்த்திக் நான் சொன்னதை கேட்கும் நிலைமையில் இல்ல, பிரம்மை பிடித்தது போல் உட்கார்ந்து இருந்ததாக சொல்ல, ரம்யா கொஞ்சம் நிம்மதி அடைந்தாள். 

மறுபக்கம் கார்த்திக் அப்படியே உட்கார்ந்திருக்க, மீனாட்சி அவனுக்கு பால் கொண்டு போய் கொடுத்து குடிக்கச் சொன்னாள். அப்போது மீனாட்சி, நீயே இப்படி உடைந்து போய்ட்டா, ரியாவை எப்படி பிடிக்கிறது? அவளை பத்தி எந்த ஆதாரமும் இல்லனு சொல்றாங்க. அந்த கேமரா மேன் யார்? அவனை உனக்கு தெரியுமா என்று கேட்க, கார்த்திக் மொத்தமாக ஒரு ஈவென்ட் கம்பெனி கிட்ட கொடுத்துட்டேன் என்று சொன்னாள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: