Karthigai Deepam: ‘தீபாவிற்குள் இறங்கிய சக்தி..உருட்டி விடப்பட்ட ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘தீபாவிற்குள் இறங்கிய சக்தி..உருட்டி விடப்பட்ட ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘தீபாவிற்குள் இறங்கிய சக்தி..உருட்டி விடப்பட்ட ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 11, 2024 03:52 PM IST

Karthigai Deepam: தீபாவுக்குள் புகுந்த சக்தி.. பேரரில் உருட்டி விடப்பட்ட ரம்யா, அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘தீபாவிற்குள் இறங்கிய சக்தி..உருட்டி விடப்பட்ட ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘தீபாவிற்குள் இறங்கிய சக்தி..உருட்டி விடப்பட்ட ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

தீபாவிற்குள் புகுந்த சக்தி 

அதாவது, அடுத்த நாள் காலையில் தீபாவும், ரம்யாவும் பரிகாரம் செய்ய உள்ள இடத்திற்கு வந்து சேர்க்கின்றனர். ரம்யா எல்லாம் ரெடியா என்று சைகையில் கேட்க, போலிச் சாமியாரும், கண்ணை காட்டுகிறான். பிறகு தீபாவை பேரருக்குள் இறங்க சொல்ல, திடீரென அவளுக்குள் ஒரு சக்தி இறங்குகிறது. இந்த நிலையில், அவள் ரம்யாவை இறங்க சொன்னாள். இதைக்கேட்ட ரம்யா அதிர்ச்சி அடைந்தாள். 

தொடர்ந்து தீபா, நீ  இறங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி ரம்யாவை அதட்டி அலற வைக்கிறாள். கூடவே, சாமியாரை சூடம் காட்ட சொல்ல, அவரும் காட்ட, அந்த சூடத்தையும் தட்டி விட்டு விடுகிறாள். அது அந்த ஆளின் கொண்டையில் பட்டு தீ பிடிக்க ஆரம்பித்து விட்டது. இதையடுத்து அந்த ஆள் அலறியடித்து ஓடினான். தொடர்ந்து, ரம்யாவின் கழுத்தை பிடித்து உள்ளே இறக்கிய தீபா பேரரை மூடி போட்டு மூடி தள்ளி விடுகிறாள்.

சரியான நேரத்தில் வந்த கார்த்திக் 

மறுபக்கம், தீபாவை தேடி வரும் கார்த்திக், ஒரு கட்டத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உருண்டு வரும் பேரரை பிடித்து திறந்து பார்க்க அதற்குள் ரம்யா இருக்கிறாள். கார்த்திக்கை பார்த்த ரம்யா, இவனுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதற, அவன் ஒரு கம்பெனியோட முதலாளி நீங்க இப்படி செய்யலாமா என்று கேட்கிறான். கார்த்திக் பேசுவதை வைத்து அவனுக்கு உண்மை தெரியவில்லை என்று புரிந்து கொள்ளும் ரம்யா, தீபாவுக்காக நான் தான் பரிகாரத்தை பண்ணேன் என்று சம்பவத்தையே மாற்றி விடுகிறாள். 

கடந்த எபிசோடில் நடந்து என்ன? 

போலீஸ் எல்லாவறையும் பறிமுதல் செய்து கொண்டு செல்ல, சாமியார் ரம்யாவுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொன்னார். இதைக்கேட்டு ரம்யா அதிர்ச்சி அடைந்தாள். மேலும் போலி சாமியார், எல்லா பொருளையும் எடுத்துட்டு போய்ட்டாங்க, நாளைக்கு புதுசா செட்டப் செய்து, தீபாவையும் போட்டு தள்ளிடலாம் என்று சொன்னார். 

இந்த நிலையில், ரம்யா தீபாவிடம் டைம் ஆகிருச்சு என்பதால், சாமியார் நாளைக்கு பரிகார பூஜையை செய்து கொள்ளலாம் என்று சொல்வதாக சொல்ல, அவள் இன்றே செய்ய வேண்டும் என்று அடம்பிடித்தாள். பின்னர் சாமியார் அவளிடம் பேச அவள் ஒரு வழியாக சமாதானம் ஆனாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: