Karthigai Deepam: அம்மன்சேலையை உடுத்திய தீபா.. ஷாக் ஆன ரம்யா.. பிரம்மையில் சிக்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: அம்மன்சேலையை உடுத்திய தீபா.. ஷாக் ஆன ரம்யா.. பிரம்மையில் சிக்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: அம்மன்சேலையை உடுத்திய தீபா.. ஷாக் ஆன ரம்யா.. பிரம்மையில் சிக்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 25, 2024 03:16 PM IST

Karthigai Deepam: அவன், எங்க அம்மா அங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, நீ சொத்தை பத்தி பேசிட்டு இருக்க, யார் கூட டி பேசிட்டு இருக்க என்று போனை பிடிங்கி பார்த்தான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: அம்மன்சேலையை உடுத்திய தீபா.. ஷாக் ஆன ரம்யா.. பிரம்மையில் சிக்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: அம்மன்சேலையை உடுத்திய தீபா.. ஷாக் ஆன ரம்யா.. பிரம்மையில் சிக்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரியா ஐஸ்வர்யாவை மாட்டி விட நினைத்தாள். இதற்கிடையே போன் செய்த  ரியா, அப்படி செய்தால், உங்க அம்மாவை கொன்னுடுவேன் என்று மிரட்டிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

வைரத்தில் பங்கு 

அதாவது, ஐஸ்வர்யா ரியாவிடம் இருக்கும் வைரத்தில் பங்கு கேட்க, ரியாவோ, நீ நான் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா, நீ கேக்குற பங்கை கொடுப்பதோடு, உங்க அம்மாவுக்கு கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் மற்றும் ஒரு கம்பெனியையும் வாங்கி தருவேன் என்று சொல்கிறாள். இதை கேட்டு ஐஸ்வர்யா பேராசையில் கொடைக்கானலில் எஸ்டேட்டா என்று வாயை பிளக்க, அவளுக்கு பளாரென அறை விழுகிறது. யாரென்று பார்த்தால் அருண். 

அவன், எங்க அம்மா அங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, நீ சொத்தை பத்தி பேசிட்டு இருக்க, யார் கூட டி பேசிட்டு இருக்க என்று போனை பிடிங்கி பார்த்தான். இதைப்பார்த்த ஐஸ்வர்யா பதறினாள். ரியா, ராஜேஸ்வரி போனில் இருந்து போன் செய்ததால், அம்மாவிடம் தான் பேசிட்டு இருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள்.

சேலையை உடுத்திய தீபா 

இதை தொடர்ந்து தீபா பரிகாரம் செய்ய ஏலத்தில் வாங்கி வந்த அம்மன் சேலையை கட்டிக்கொண்டு, சாமியாரை பார்க்க கிளம்பினாள். அப்போது, மீனாட்சி உனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருவது போல் கனவு கண்டதாக சொல்லி தடுக்க முயற்சிக்க, கனவு தானே அக்கா, எனக்கு ஒன்னும் ஆகாது என்று கிளம்பிச் செல்கிறாள். அம்மன் புடவையில் வரும் தீபாவை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். 

இந்த புடவையை மாற்ற வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அவள், வீட்ல யார் கிட்டயும் எதுவும் சொல்லலையே என்று கேட்க, அவள் கார்த்திக்கிடம் சொன்னதாக சொல்கிறாள். இதைகேட்ட ரம்யா மேலும் ஷாக் ஆகிறாள்.  அப்போது தீபா, கார்த்திக் நான் சொன்னதை கேட்கும் நிலைமையில் இல்ல, பிரம்மை பிடித்தது போல் உட்கார்ந்து இருந்ததாக சொல்ல, ரம்யா கொஞ்சம் நிம்மதி அடைகிறாள். 

மறுபக்கம் கார்த்திக் அப்படியே உட்கார்ந்திருக்க, மீனாட்சி அவனுக்கு பால் கொண்டு போய் கொடுத்து குடிக்கச் சொல்கிறாள், அப்போது மீனாட்சி, நீயே இப்படி உடைந்து போய்ட்டா, ரியாவை எப்படி பிடிக்கிறது? அவளை பத்தி எந்த ஆதாரமும் இல்லனு சொல்றாங்க. அந்த கேமரா மேன் யார்? அவனை உனக்கு தெரியுமா என்று கேட்க, கார்த்திக் மொத்தமாக ஒரு ஈவென்ட் கம்பெனி கிட்ட கொடுத்துட்டேன் என்று சொல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? தீபாவுக்கு வர போகும் ஆபத்து என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.