Karthigai Deepam: ‘ஐஸ்வர்யா ஆடும் ஆடு புலி ஆட்டம்.. சிக்கித்தவிக்கும் ரம்யா’ - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் ரம்யாவும் போட்டி போட்டு கொண்டு கிஃப்ட் வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் அப்டேட்:
அபிராமி வீட்டில் கல்யாண நாள் கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கேக்குடன் தயார் நிலையில் இருக்கின்றனர். மறுபக்கம் ஃபங்க்ஷன் கிளம்பிய ரம்யா, அப்பாவையும் ஃபங்க்ஷனுக்கு கூப்பிட, அவர் எனக்கு உடம்பு முடியல நீ மட்டும் போயிட்டு வா மா என்று சொல்கிறார்.
ஐஸ்வர்யா எப்படியாவது ரம்யா கார்த்திக் தீபா கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருவதை தடுக்க வேண்டும் என்று யோசிக்கிறாள். இதற்காக பிளான் போட்டு ஒரு ஆளை ஏற்பாடு செய்து ரம்யா கிளம்ப உள்ள காரை ரிப்பேர் செய்து விடுகிறாள். இதனால் கார் ஸ்டார்ட் ஆகாமல் போய் விடுகிறது.
காத்திருந்த தீபா:
இதனையடுத்து ரம்யா கேப் புக் செய்து தீபா வீட்டிற்கு வந்து கொண்டிருக்க, இங்கே தீபா ரம்யா வருவதாகச் சொன்னாள், அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்று சொல்ல, அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யாவின் முதல் முயற்சி தோல்வி அடைந்ததும் அடுத்து அவளே கார் எடுத்து வந்து, ரம்யா வரும் கேப் முன்னால் நிறுத்தி, வம்பிழுத்து ரம்யாவின் நேரத்தை வீணடிக்கிறார்.
மறுபக்கம் அபிராமி வீட்டில் எல்லாரும் ரம்யா வருகைக்காக காத்திருக்க, தீபா அவளுக்கு போன் செய்ய ரம்யா போனை கவனிக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
மீனாட்சியும், மைதிலியும் தீபாவிடம், இந்த வீடு இன்னும் பெருசா தாராளாக இருக்கு என்று பேசிக்கொண்டனர். அடுத்து தீபாவிடம், இன்னைக்கு சாயங்காலம் நடக்க போற ஃபங்ஷனில் கார்த்திக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போற என்று கேட்க, தீபா இதுவரைக்கும் யோசிக்கல என்று சொன்னாள். திடீரென அவளுக்கு ஒரு யோசனை வந்து, கடைக்கு கிளம்பி வந்தாள்.
மறுபக்கம் ரம்யா தன்னுடைய அப்பாவிடம் இன்னைக்கு ஒரு ஃபங்ஷனுக்கு போகணும் என்று சொன்னாள். ரம்யாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து, அவர் பூரிப்படைந்தார். பிறகு ஒரு கிஃப்ட் வாங்கணும் என்று சொல்லி, அவளும் கிளம்பி கடைக்கு வந்தாள். கடைசியாக தீபாவும், ரம்யாவும் ஒரே கடைக்கு வர, இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, ரம்யா உன் ஹஸ்பண்ட்டுக்கு என்ன கிஃப்ட் வாங்க போற என்று கேட்க, தீபா அபிராமி மற்றும் கார்த்தியின் சிறு வயது போட்டோக்களை ஒன்று சேர்த்து, ஒரு ஃபிரேம் போட போவதாக சொன்னாள். பிறகு தீபா, ரம்யாவிடம் இதே கேள்வியை கேட்க, அவள் ராமன் சீதை போட்டோ ஒன்றை வாங்கினாள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்