Karthigai Deepam: அபிராமி விட்ட பளார் அறை! - அதிர்ச்சியில் உறைந்த ஐஸ்வர்யா! - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
இந்த விஷயத்தை அபிராமி மற்றும் அருணிடம் டாக்டர் சொல்ல, அவர்கள் அதிர்ச்சி அடைந்து, ஐஸ்வர்யாவை திட்டி அறைகின்றனர்;
ஐஸ்வர்யாவின் கர்ப்பம்.. டாக்டர் சொன்ன தகவல், கார்த்தியின் அடுத்த அதிரடி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடந்தது என்ன?
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
அபிராமியை கூட்டிக்கொண்டு மருத்துவமனை வந்த ஐஸ்வர்யா!
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யா அபிராமியை கூட்டிக்கொண்டு மருத்துவமனை வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சைடு கேப்பில் தனியாக வந்து ஐடியா கேட்ட ஐஸ்வர்யா!
அதாவது, ஐஸ்வர்யா சைடு கேப்பில் தனியாக வந்து, ரியாவுக்கு போன் போட்டு, ஏதாவது ஐடியா கொடு என்று கேட்க, அவளும் ஒரு ஐடியாவைச் சொல்கிறாள். அது ஃபெயிலியர் ஆகிறது. இதையடுத்து வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா அபிராமியுடன் கிளம்பி மருத்துவமனை வருகிறாள்.
அவள் கர்ப்பம் இல்லை என தெரிய வந்தது!
மருத்துவமனையில் டாக்டர் ஐஸ்வர்யாவின் நண்பராக இருக்க, அவள் ஓரளவு நிம்மதி அடைகிறாள். இதனையடுத்து டாக்டர் ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்ய, அவள் கர்ப்பம் இல்லை என தெரிய வருகிறது.
ஐஸ்வர்யா கண்ட பகல் கனவு
இந்த விஷயத்தை அபிராமி மற்றும் அருணிடம் டாக்டர் சொல்ல, அவர்கள் அதிர்ச்சி அடைந்து, ஐஸ்வர்யாவை திட்டி அறைகின்றனர்; கடைசியில் இது ஐஸ்வர்யா கண்ட பகல் கனவு என தெரிய வருகிறது.
ஐஸ்வர்யா கர்ப்பம் - டாக்டர் சொன்ன பொய்!
இதையடுத்து பரிசோதனை செய்யும் டாக்டரிடம் ஐஸ்வர்யா கெஞ்சி கூத்தாடி, உண்மையை மறைக்கச் சொல்ல, வேறுவழியில்லாமல் டாக்டர் ஒப்புக்கொள்கிறாள். பிறகு டாக்டர் ஐஸ்வர்யா கர்ப்பம் தரித்திருப்பதாகவும், குழந்தை நன்றாக இருப்பதாகவும் கூறுகிறார்.
மற்றவர்களோடு மற்றவர்களாக கார்த்தி!
அடுத்ததாக மில்லில் தொழிலாளர்கள் சாப்பாடு வாங்க லைனில் நிற்க, கார்த்தியும் அவர்களோடு லைனில் நிற்கிறான்.
நானும் தொழிலாளிதானே லைனில் இருந்து தான் சாப்பாடு வாங்கணும் - நெகிழ்ந்த தொழிலாளர்கள்!
மற்ற தொழிலாளர்கள் நீங்க எதுக்கு நிற்கிறீர்கள் என்று கேட்க, நானும் தொழிலாளிதானே லைனில் இருந்து தான் சாப்பாடு வாங்கணும் என்று நின்று, சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறான். அவன் சாப்பிடும் போதுதான், சாப்பாடு நன்றாகவே இல்லை என்பது தெரிய வருகிறது.
மேனேஜரை கூப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார்த்தி!
இதனையடுத்து, எப்போதும் இப்படிதான் சாப்பாடு போடுகிறார்கள் என்று தொழிலாளர்கள் சொல்ல, கார்த்திக் மேனேஜரை கூப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.
கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்