புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 28, 2024 02:11 PM IST

புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்!

புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி மற்றும் மகேஷூக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, எல்லாரும் கார்த்தியை பற்றி தப்பாக பேச, ரேவதி கார்த்திக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள்; பிறகு மண்டபத்தில் இருந்து எல்லாரும் கிளம்பி செல்கின்றனர். மாயா மற்றும் மகேஷ் தங்களது வீட்டில் இருக்கும் போது கார்த்திக் அங்கு வர, இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக், எதுக்காக இப்படி மாத்தி சொன்னீங்க என்று கேட்க, சிவனாண்டிதான் எங்களை மிரட்டி இப்படி சொல்ல சொன்னதாக சொல்கின்றனர்.

கார்த்திக்கிற்கு வந்த சந்தேகம்

இதை கேட்ட கார்த்திக் சரி.. இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பி வர, மாயா சிவனாண்டிக்கு போன் செய்து கார்த்திக் வந்து விசாரித்து விட்டு போனதாக போட்டு கொடுக்கிறாள். அடுத்து கார்த்திக்கு மண்டபத்தில் இருந்து போன் கால் வருகிறது. அந்த போன் காலில் சில பொருட்களை மண்டபத்தில் மறந்து விட்டு சென்றதாக சொல்ல, கார்த்திக் அதை எடுத்து வர மண்டபத்திற்கு வருகிறான்; அங்கே மாயா கட்டி இருந்த பச்சை கலர் பட்டு புடவையும் இருக்கிறது.

கார்த்திக் இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்ததும், மயில் வாகனம் ரூமுக்குள் வந்து, நீ இந்த மாதிரி பண்ணி இருக்க மாட்டேன்னு எனக்கும் தெரியும்.. ஆனால், அதை நான் சொல்ல முடியாது. இந்த வீட்டில் என்னுடைய நிலைமை என்னனு உனக்கே தெரியும், என்னை மன்னிச்சுரு என்று சொல்கிறான்.

பிறகு கார்த்திக் மண்டபத்தில், இந்த புடவை இருந்ததாக சொல்ல மயில் வாகனம் மாயா தான் இந்த புடவையை கட்டி இருந்ததாக சொல்ல, கார்த்திக்கு சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.