Karthigai Deepam: மயிரிழையில் தப்பித்த தீபா உயிர்.. மறுபடியும் ஸ்கெட்ச் போடும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மயிரிழையில் தப்பித்த தீபா உயிர்.. மறுபடியும் ஸ்கெட்ச் போடும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: மயிரிழையில் தப்பித்த தீபா உயிர்.. மறுபடியும் ஸ்கெட்ச் போடும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 10, 2024 02:29 PM IST

Karthigai Deepam: போலீசை பார்த்த போலி சாமியார் ஒளிந்து கொள்ள, போலீஸ்காரர்களோ, சாராயம் காய்ச்சறவங்க இங்க எங்கயாவது பக்கத்தில் தான் இருக்கனும், தேடி கண்டு பிடிங்க என்று சொல்ல, போலீஸ் லத்தியை தட்டி, தட்டி நாலாபுறமும் தேடினர். -கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: மயிரிழையில் தப்பித்த தீபா உயிர்.. மறுபடியும் ஸ்கெட்ச் போடும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: மயிரிழையில் தப்பித்த தீபா உயிர்.. மறுபடியும் ஸ்கெட்ச் போடும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், போலி சாமியார் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து, ரம்யாவையும் தீபாவையும் சீக்கிரம் வர சொல்லி இருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

போலீசில் மாட்டிய போலிச்சாமியார் 

அதாவது, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போனில், காட்டுக்குள் நடுவே இருக்கும் ஆற்று பகுதியில், கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக சொல்லி தகவல் வர, போலீஸ் அந்த இடத்திற்கு கிளம்பிச் செல்கின்றனர். போலீஸூக்கு தகவல் கிடைத்தது போலவே, ஒரு ட்ரம்மிற்கு பூஜை போட்டு இருப்பதை பார்த்த போலீஸ், கள்ள சாராயம் காய்ச்சுவதே தவறு, இதுல அதுக்கு பூஜை வேற என்று சொல்லி கோபப்பட்டனர். 

இதற்கிடையே போலீசை பார்த்த போலி சாமியார் ஒளிந்து கொள்ள, போலீஸ்காரர்களோ, சாராயம் காய்ச்சறவங்க இங்க எங்கயாவது பக்கத்தில் தான் இருக்கனும், தேடி கண்டு பிடிங்க என்று சொல்ல, போலீஸ் லத்தியை தட்டி, தட்டி நாலாபுறமும் தேடினர். அப்போது அது மறைந்திருந்த போலி சாமியார் மீது பட்டது. 

பிளானை மாற்றிய ரம்யா 

அடுத்து போலீஸ், அந்த பொருட்கள் எல்லாவறையும் பறிமுதல் செய்து கொண்டு செல்ல, சாமியார் ரம்யாவுக்கு போன் செய்கிறார். அவள் எடுக்காமல் இருக்க, திரும்ப திரும்ப போன் அடிக்கிறார். இதனையடுத்து, காரில் இருந்து இறங்கிய அவள், அங்க தான் வந்திட்டு இருக்கோம் என்று கோபப்பட்டாள். இந்த நிலையில், சாமியார் நடந்த விஷயங்களை சொல்ல, ரம்யா அதிர்ச்சி அடைகிறாள்.

மேலும் போலி சாமியார், எல்லா பொருளையும் எடுத்துட்டு போய்ட்டாங்க, நாளைக்கு புதுசா செட்டப் செய்து, தீபாவையும் போட்டு தள்ளிடலாம் என்று சொல்கிறார். இந்த நிலையில், ரம்யா தீபாவிடம் டைம் ஆகிருச்சு என்பதால், சாமியார் நாளைக்கு பரிகார பூஜையை செய்து கொள்ளலாம் என்று சொல்வதாக சொல்கிறாள்.

ஏமாற்றமடைந்த தீபா 

ஆனால், தீபா அத்தையோட உயிரை காப்பாத்தணும்; அதனால் இன்னைக்கே பரிகாரம் செய்து விடலாம் என்று அடம் பிடிக்கிறாள். ரம்யா சாமியாருக்கு போனை செய்து சமாளிக்க சொல்லி தீபாவிடம் போனை கொடுக்க, அவர் இந்த பரிகாரத்தை காலை நேரத்தில் செய்யணும், இனிமே செய்தால் அது தீய பலனை தான் தரும், உங்க அத்தையோட உயிரை காப்பாற்ற, நான் பூஜை பண்றேன். 

பரிகாரத்தை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று சொல்ல தீபா யோசித்து, ஓகே சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.