Karthigai Deepam: அபிராமியை கொல்லத்துணிந்த மணி.. ஐஸ்வர்யாவிற்கு ஏறிய பிபி.. கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: அபிராமியை கொல்லத்துணிந்த மணி.. ஐஸ்வர்யாவிற்கு ஏறிய பிபி.. கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: அபிராமியை கொல்லத்துணிந்த மணி.. ஐஸ்வர்யாவிற்கு ஏறிய பிபி.. கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 08, 2024 04:28 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரவுடிகள் அபிராமியை கடத்த பிளான் போட, கார்த்திக்கிற்கும் அபிராமி இருக்கும் இடம் தெரிய வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு காரில் வர, ரவுடிகள் அபிராமியை ஆம்புலன்ஸில் கடத்திக்கொண்டு கிளம்பிச் செல்கின்றனர். அதை கண்டுபிடித்த கார்த்திக், ஆம்புலன்சை பின் தொடர்ந்தான். இதற்கிடையே போலீசுக்கும் தகவல் கொடுத்து விட்டான். 

இதனைத் தொடர்ந்து ரவுடிகள் ஒரு தோப்புக்குள் காரை விடுகின்றனர். மேலும் அங்கே கேட் அருகே இருக்கும் வாட்ச்மேனிடம், யார் வந்து கதவை திறக்கச் சொன்னாலும் திறக்க கூடாது. யார் வந்தாலும் உள்ள விடக்கூடாது என கண்டிஷன் போட்டு செல்கின்றனர்.

இதனிடையே, ரவுடிகளின் காரை மிஸ் செய்த கார்த்திக், எங்க போனாங்க என்று தெரியாமல் குழம்பி, இங்கும் அங்குமாக அலைகிறான். ஒரு கட்டத்தில், தோப்பை பார்த்ததும் சந்தேகம் வந்து அங்கு செல்கிறான். அங்கு முன்னால் அமர்ந்து இருந்த வாட்ச்மேனை கதவை திறக்கச் சொல்ல அவனோ, ரவுடிகள் சொன்னது போல கதவை திறக்க முடியாது யாரும் உள்ள போகக்கூடாது என சொல்கிறார்.

உடனே கார்த்திக், அவரிடம் சண்டை போட்டு காரை உள்ளே எடுத்துச் செல்ல, ரவுடிகள் கார்த்தியை சுற்றிவழைத்தனர். இதனையடுத்து அபிராமி இருக்கும் இடம் இதுதான் என்பதை உறுதி செய்த கார்த்திக் ரவுடிகளிடம் சண்டையிடுகிறான்.

மறுபுறம் அபிராமியை ஆம்புலன்ஸில் தூக்கி வந்த மணி, ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு, அபிராமியை தூக்கிட்டு வந்துட்டோம்; ஆனால் கார்த்திக்கும் எங்கள பார்த்து பின் தொடர்ந்து வருகிறான்; 

எப்ப வேணாலும் இங்க வரலாம் என்று சொல்ல, ஐஸ்வர்யா ஒன்னு பண்ணுங்க, அபிராமியை அங்கேயே விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆகிடூங்க, கார்த்திக் கிட்ட மாட்னா அவ்வளவுதான் என்று எச்சரிக்கிறாள். 

ஆனால் மணி, அபிராமி என் முகத்தைப் பார்த்து இருக்காங்க, இப்படியே விட்டா அவங்க என்ன நிச்சயம் அடையாளம் காட்டிடுவாங்க; அப்படி நான் மாட்டிக்கிட்டா நீங்களும் மாட்டிக்குவீங்க; அதனால அவங்கள கொன்னுடுறேன் என்று சொல்கிறான். அதற்கு ஐஸ்வர்யா வேண்டாம் பெரிய பிரச்சினை ஆயிடும் என்று சொல்கிறான். 

ஆனால் மணி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் ஒரு பிரச்சினையும் வராது என்று சொல்லி போனை வைக்க, ஐஸ்வர்யாவுக்கு பிபி ஏறுகிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.