Karthigai Deepam: கார்த்தி போட்ட மாஸ்டர் பிளான்..நம்பி வந்து சிக்கிய ரவுடி! - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கார்த்தி போட்ட மாஸ்டர் பிளான்..நம்பி வந்து சிக்கிய ரவுடி! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: கார்த்தி போட்ட மாஸ்டர் பிளான்..நம்பி வந்து சிக்கிய ரவுடி! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 03, 2024 03:03 PM IST

அவருக்கு எந்த ஆபத்தும் வராதுனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாள். கார்த்திக்கும் கண்டிப்பாக உங்க கணவருக்கு எந்த ஆபத்தும் வராது என்று சத்தியம் செய்கிறான்.

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

அதாவது, போலீஸ் அந்த மணியோட வீடு தெரியும், அங்க போய் விசாரித்தால் நிச்சயம் ஏதாவது உண்மை தெரிய வரும் என்று சொல்ல, அனைவரும் மணி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். அங்கு நிறைமாத கர்ப்பிணியாக மணியின் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள்.

இதனையடுத்து கார்த்திக் அவளிடம் மணி குறித்து விசாரிக்க, அவளோ அவரை பத்தி தெரியாது, வாரத்தில் ஒரு நாள் தான் வீட்டிற்கு வருவார் என்று சொல்லி மழுப்புகிறாள். 

தொடர்ந்து, கார்த்திக் வீட்டில் நடந்த பிரச்சினைகள் அனைத்தையும் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கிறான். கடைசியாக அந்த பெண்மணி அவர் எங்க இருக்காருன்னு உண்மையாகவே எனக்கு தெரியாது என்று கூறிய அவள், அவரிடம் இருக்கும் போன் நம்பர் மட்டும்தான் என்கிட்ட இருக்கு, அந்த நம்பரை வேண்டுமென்றால் தருகிறேன். ஆனால் அவருக்கு எந்த ஆபத்தும் வராதுனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாள். கார்த்திக்கும் கண்டிப்பாக உங்க கணவருக்கு எந்த ஆபத்தும் வராது என்று சத்தியம் செய்கிறான்.

அடுத்ததாக அந்த பெண்மணி போன் நம்பரை கொடுக்க, கார்த்திக் அங்கு இருக்கும் யாராவது பேசினால் சந்தேகம் வந்து விடும் என்பதால், அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் பெண்மணி போனில் இருந்து போன் செய்து ஓனரை தான் சொல்வது போல பேச சொல்கிறான்.

அந்த பெண்மணியும் போன் பண்ண, முதலில் மணி எடுக்காமல் இருக்கிறான். மீண்டும் போன் பண்ண, எடுத்து பேசுகிறான். அப்போது ஹவுஸ் ஓனர் உன் பொண்டாட்டி பாக்கியத்துக்கு பிரசவவலி வந்துடுச்சி, ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கோம். ஆனால் டாக்டர் சீரியஸ்னு சொல்லி நீ கையெழுத்து போடணும்னு சொல்றாங்க..உடனே கிளம்பி வா என்று கூப்பிட, மணி என்னால் இப்போ வர முடியாது என்று சொல்கிறான்.

நீ கையெழுத்து போட்டாதான் உன் பொண்டாட்டிக்கு பிரசவம் பார்ப்பங்களாம் என்று சொல்லி அழுத்தம் கொடுக்க, இறுதியில் மணியும் வருவதாகச் சொல்கிறான். 

ஹாஸ்பிடலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து போலீஸ் மப்டியில் காத்திருக்க, மணி ஹாஸ்ப்பிடல் வந்து மனைவி இருக்கும் ரூமுக்குள் செல்கிறான். இதனையடுத்து அவனை உள்ளவே வைத்து லாக் செய்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: