Karthigai Deepam: கார்த்தி போட்ட மாஸ்டர் பிளான்..நம்பி வந்து சிக்கிய ரவுடி! - கார்த்திகை தீபம் அப்டேட்!
அவருக்கு எந்த ஆபத்தும் வராதுனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாள். கார்த்திக்கும் கண்டிப்பாக உங்க கணவருக்கு எந்த ஆபத்தும் வராது என்று சத்தியம் செய்கிறான்.
கார்த்திகை தீபம்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்திய ரவுடிகளில் மணி என்பவனை தீபா காட்டி கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, போலீஸ் அந்த மணியோட வீடு தெரியும், அங்க போய் விசாரித்தால் நிச்சயம் ஏதாவது உண்மை தெரிய வரும் என்று சொல்ல, அனைவரும் மணி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். அங்கு நிறைமாத கர்ப்பிணியாக மணியின் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள்.
இதனையடுத்து கார்த்திக் அவளிடம் மணி குறித்து விசாரிக்க, அவளோ அவரை பத்தி தெரியாது, வாரத்தில் ஒரு நாள் தான் வீட்டிற்கு வருவார் என்று சொல்லி மழுப்புகிறாள்.