Karthigai Deepam: : கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா போட்ட பிட்டு.. ஓட விட்டு பின் மண்டையில் அடித்த அபிராமி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: : கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா போட்ட பிட்டு.. ஓட விட்டு பின் மண்டையில் அடித்த அபிராமி!

Karthigai Deepam: : கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா போட்ட பிட்டு.. ஓட விட்டு பின் மண்டையில் அடித்த அபிராமி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 23, 2024 01:13 PM IST

கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா சொன்ன வார்த்தை.. பேய் ஓட்டி விட்ட அபிராமி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

அதாவது, கார்த்தி செய்த விஷயத்தால், தொழிலாளர்கள் எல்லாரும் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர். அடுத்ததாக வேலை முடிந்து அருண் மற்றும் ஆனந்த் வீட்டிற்கு வர, இன்னைக்கு எப்படி போச்சு என்று ரியா கேட்கிறாள். 

அதற்கு அவன், அந்த கார்த்திக்கை நம்மளால தோற்கடிக்க முடியாது போல, எல்லாரும் அவனை கொண்டாடுறாங்க என்று சொல்கிறான். 

பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர, அபிராமி அவனை வரவேற்று சாப்பிட கூப்பிடுகிறாள்; இதையடுத்து, ஐஸ்வர்யா அவர் தான் இந்த சொத்து உரிமை கொண்டாட மாட்டேன்னு சொன்னாரு, அவரை டைனிங் டேபிளில் உட்கார வைத்து சாப்பாடு கொடுக்கறீங்க என்ன இதெல்லாம்… என்று கேட்கிறாள்.

இதனைக்கேட்டு கடுப்பாகும் அபிராமி, ஆயிரம் தான் பிரச்சினை நடந்தாலும், அதை எல்லாம் தாண்டி அவன் என்னுடைய பிள்ளை, அவனுக்கு நான் சாப்பாடு சமைத்து கொடுப்பேன், அதை தடுக்கிற உரிமை உனக்கு மட்டுமில்ல; யாருக்குமே கிடையாது என்று சொல்கிறாள். 

அடுத்து கார்த்திக் சாப்பிட்டு முடித்து விட்டு, ரூமுக்கு சென்று வேலை செய்த அசதியில் அசந்து தூங்குகிறான். இதையடுத்து, தீபா அவனுக்கு கால் அமுக்கி விடுகிறாள்.

இதையடுத்து மறுநாள் காலையில் கார்த்திக் ஆபிஸ் கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த கார்த்திகை தீபம் சீரியலில் நடந்தது என்ன? 

மதுவிற்கு வலிப்பு வந்து கீழே விழுந்த நிலையில், ரியா அவர் எனக்கு யார் என்று தெரியாது என்று நழுவிக் கொண்டாள். இதனையடுத்து மீனாட்சி, மைதிலி ஆகியோர் மதுவை மருத்துவமனையில் அட்மிட் செய்து, அவரிடம் பேச்சுக் கொடுக்க, ரியா குறித்த விஷயங்கள் தெரிய வந்தது. 

மறுபக்கம், ரியா வீட்டுக்கு வர, அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து சமையல் செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்தாயா…? அபிராமி மனதில் இடம் பிடிக்க, நாம் ஏதாவது பண்ணலாம்னு பார்த்தா, இந்த தீபா கூடவே இருக்கா என கடுப்பானாள். 

மற்றொரு பக்கம் தொழிலாளர்கள் எல்லோரும் பாட்டு போட்டு வேலை செய்ய, ஆனந்த் என்ன இதெல்லாம் என்று கேள்வி கேட்டான். 

இதற்கு கார்த்திக், காலையில ரெண்டு மணி நேரமா மிஷின் வேலை செய்யல… அதனால கம்பெனிக்கு நஷ்டம் வரக்கூடாது என ஓவர் டைம் வேலை பாக்குறாங்க. அதனால உனக்கு என்ன பிரச்சினை என்று பதிலடி கொடுத்தான். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: