Karthigai Deepam: ரெஜிஸ்டர் ஆபிஸில் ஆனந்த் ரியாவுடன் ஆனந்த்.. கல்யாணத்தை நிறுத்த தீபா செய்ய போவது என்ன?
“கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ரியா மற்றும் ஆனந்த் ஒன்றாக வருவதை பார்க்கிறாள் தீபா. இதைக்கண்டு பதற்றமடைந்த அவள், மீனாட்சி இதைப் பார்த்து விடாமல் தடுக்கிறாள்” - கார்த்திகை தீபம் அப்டேட்!

ரெஜிஸ்டர் ஆபிஸில் ஆனந்த் ரியாவுடன் ஆனந்த்.. கல்யாணத்தை நிறுத்த தீபா செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், ராஜேஸ்வரி தீபாவை வம்புக்கு இழுத்தாள். மறுபக்கம் ரியா, ஆனந்தை ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திக் தீபாவிடம் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு என் மேல காதல் இருந்திருக்கு; அதை ஏன் என்கிட்ட சொல்லல என்று கேட்டு, இனிமே நீங்க சார் எல்லாம் கூப்பிடாதீங்க; வேற மாதிரி மாமா வாங்க போங்கன்னு கூப்பிடுங்க என சொன்னான். திடீரென்று என்ன நினைத்தானோ தெரியவில்லை.. இல்லை வேண்டாம்.. அது ரொம்ப பழசா இருக்கு; மீனாட்சி எல்லாம் வாங்க போங்கன்னு கூப்பிடுறாங்க, நீங்களும் அதே மாதிரி சொல்லுங்க என்று சொல்ல, தீபா வாங்க போங்க என பேசி பழகுகிறாள்.
இதைத் தொடர்ந்து தீபா விளக்கு போடுவதற்காக கோயிலுக்கு கிளம்பிச் செல்ல, அவளுடன் அபிராமிக்கு பதில் மீனாட்சி வருகிறாள். இதையடுத்து தீபா, என்னக்கா எப்பவும் அத்த தான வருவாங்க… இன்னைக்கு நீங்க வந்து இருக்கீங்க என்று கேட்க இன்னைக்கு எனக்கு கல்யாண நாள், அதனால விளக்கு போட வருவதாக சொல்கிறாள்.
பிறகு இருவரும் கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ரியா மற்றும் ஆனந்த் ஒன்றாக வருவதை பார்க்கிறாள் தீபா. இதைக்கண்டு பதற்றமடைந்த அவள், மீனாட்சி இதைப் பார்த்து விடாமல் தடுத்து, எனக்கு ஒருத்தர சந்திக்க வேண்டிய வேலை இருக்கு… நான் பாத்துட்டு வந்துடுறேன் என சொல்லி, மீனாட்சியை வீட்டுக்கு அனுப்புகிறாள்.
அதன் பிறகு தீபா அவர்களை பின்தொடர்ந்து செல்ல, இருவரும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு செல்வது தெரியவருகிறது. இந்த நிலையில் தீபா கார்த்திக்கு போன் போட, போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தீபா இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த போவது எப்படி என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கார்த்திக் தர்மலிங்கம் மாமா குடும்பத்தோட இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம்; அதனால தான் இங்கே கூட்டி வந்ததாக சொல்லி செல்கிறான். இதைத்தொடர்ந்து மறுபக்கம் ரியா ஆனந்திடம் நாளைக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு உங்களுக்கும் எனக்கும் ரிஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம் என்று சொல்கிறானள்
அண்ணன், தங்கை ஏன் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்க, இல்ல.. நாளைக்கு மீனாட்சிக்கும் எனக்கும் கல்யாண நாள் அதனால என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டா என்று சொல்கிறான். ஆனால், ரியா ஆனந்தை மூளை சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.
மறுபக்கம் மீனாட்சி மற்றும் தீபா என இருவரும் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க, அங்கு வரும் ராஜேஸ்வரி திட்டம் போட்டு தான் உங்க அப்பா அம்மாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க, ஒன்னும் இல்லாத குடும்பம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் இங்கு வந்து இருக்கீங்க என்று அவமானப்படுத்தி பேச, தீபா தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்கிறாள்.
ஜானகி மற்றும் மைதிலி இதை கேட்டு வருத்தப்படுகின்றனர். மீனாட்சி சாக்கடையில் கல் எறிஞ்சா அது நம்ம மேல தான் மீண்டும் வரும்.. நீ வா என்று தீபாவை அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்