Karthigai Deepam: ‘குறட்டையால் அவதிப்பட்ட கார்த்திக்.. நள்ளிரவில் ரம்யா கொடுத்த குல்பி! - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘குறட்டையால் அவதிப்பட்ட கார்த்திக்.. நள்ளிரவில் ரம்யா கொடுத்த குல்பி! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘குறட்டையால் அவதிப்பட்ட கார்த்திக்.. நள்ளிரவில் ரம்யா கொடுத்த குல்பி! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 30, 2024 03:19 PM IST

Karthigai Deepam: ஒரு பக்கம் கார்த்திக் பஞ்சை தூக்கி போட, தீபா தலையணைகளை எடுத்து விட்டாள். அதன் பிறகு நடு இரவில், ஆனந்த் குறட்டை விட ஆரம்பித்து விட்டான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam:  ‘குறட்டையால் அவதிப்பட்ட கார்த்திக்.. நள்ளிரவில் ரம்யா கொடுத்த குல்பி! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘குறட்டையால் அவதிப்பட்ட கார்த்திக்.. நள்ளிரவில் ரம்யா கொடுத்த குல்பி! - கார்த்திகை தீபம் அப்டேட்!

தீபாவை தீர்த்துக்கட்டி விடலாம்

அதாவது, ரம்யா நேரில் ரியா இருக்கும் இடத்திற்கு வந்து, நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை சொல்லி, எனக்கு எப்படியாவது கார்த்திக்கை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். அதற்கு ரியா, நீ கவலையே படாத; தீபாவை எப்படியாவது போட்டுக் தள்ளிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.

மறுபக்கம் அபிராமி, வீட்டில் இன்னும் பத்து நாட்களில், கார்த்திக் தீபாவுக்கு கல்யாணம் என்பதால், அதுவரை அவர்கள் தனித்தனியாகதான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதனால் கார்த்திக்குடன், ஆனந்தையும் மீனாட்சி உடன் தீபாவையும் படுத்துக் கொள்ள சொல்கின்றனர்.

பொறி வைத்து பேசிய மீனாட்சி 

அதன் பிறகு மீனாட்சி, கார்த்தியிடம் பஞ்சை கொண்டு வந்து கொடுக்க, அவன் எதுக்கு என்று கேட்க வச்சுக்கோங்க உதவும் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள். பிறகு தீபாவுக்கும், அவளுக்கும் இடையில் தலையணைகளை அடுக்கி வைக்க, தீபா எதுக்கு இதெல்லாம் என்று கேட்க, மீனாட்சி போக போக புரியும் என்று சொல்கிறாள்.

ஒரு பக்கம் கார்த்திக் பஞ்சை தூக்கி போட,  தீபா தலையணைகளை எடுத்து விட்டாள். அதன் பிறகு நடு இரவில், ஆனந்த் குறட்டை விட ஆரம்பித்து விட்டான். இதைக்கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்து கார்த்திக், அண்ணி பஞ்சை கொடுத்தது இதற்குத்தானா என்று புலம்பியபடி பஞ்சை தேடினான். 

அவதிப்பட்ட கார்த்திக்

அதேபோல் இங்கே, மீனாட்சி தீபாவின் மீது மீனாட்சி காலை தூக்கி போட, அவள் தூக்கம் கலைந்து தூங்க முடியாமல் தவிக்கிறாள். இதனால் தீபா வெளியே வர கார்த்திக் அங்கே நின்று கொண்டிருந்தான்.  தீபாவை பார்த்ததும் தூங்கலையா என்று கேட்க, உங்களை பார்க்கணும் போல இருந்தது. அதனாலதான் வெளியில வந்தேன் என்று சொல்கிறாள்.

பிறகு உங்களுக்கு ஏதாவது வேணுமா என்று கேட்க கார்த்திக் எனக்கு குல்பி வேண்டும் என்று சொல்கிறான். தீபா உடனே கொண்டு வந்து தரேன் என்று வேக வேகமாக சென்று ரம்யாவுக்கு போன் போட்டு குல்பி வாங்கிட்டு வந்து கொடுக்கும்படி உதவி கேட்கிறாள்.

ரம்யாவும் அதைக் கொண்டு வந்து கொடுக்க, தீபா நானே உங்களுக்காக வெளில போய் வாங்கிட்டு வந்தேன் என்று பொய் சொல்லி, கார்த்திக்கிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொள்ளும் கார்த்திக் நீங்க சொன்னத நான் நம்பிட்டேன். ரம்யா கார் வந்து போனதை நானும் கவனிச்சேன் என்று சொல்கிறான்.

அடுத்த நாள் காலையில் ரம்யா வீட்டு காலிங் பெல் அடிக்க, அவள் கதவைத் திறக்க சேகர் அங்கு நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். உன்னை தான் வெளியூர் போக சொல்லி பணம் கொடுத்தனே, போகலையா என்று கேட்க அவன் அந்த பணத்தை எல்லாம் சூதாட்டத்தில் கோட்டை விட்டுட்டேன். இன்னும் கொஞ்சம் பணம் தாங்க என்று கேட்கிறான்.

ரம்யா வேறு வழியின்றி கொஞ்சம் பணத்தை கொடுத்து ஒழுங்கு மரியாதையா வெளியூர் ஓடிப் போயிடு என்று திட்டி அனுப்புகிறாள். இதை ரம்யாவின் அப்பா பார்த்து விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: