Karthigai Deebam: காணாமல் போன தீபா.. தேடி அலையும் கார்த்திக்..ஐஸ்வர்யாவுக்கு விழுந் டோஸ்; கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deebam: காணாமல் போன தீபா.. தேடி அலையும் கார்த்திக், கனவு கண்டு ஏமாந்த ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரியா கார்த்திக்கு போன் செய்து டீல் பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஒரு பக்கம் ரம்யா, தீபாவை காணவில்லை என்று தேடுகிறாள். இன்னொரு பக்கம், அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்க,.அருண் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து, தீபா குறித்து விசாரிக்கிறான்.
அதற்கு ஐஸ்வர்யா, தீபா வீட்டில் இல்ல, நான் மட்டும் தனியாத்தான் இருக்கேன் என்று அருணை வீட்டிற்கு கூப்பிட, அவன் அவளை திட்டி போனை வைக்கிறான். அதன் பிறகு கார்த்திக், தீபாவை தேடி செல்லும் போது, வழியில் மாணிக்கத்தை பார்க்கிறான். மாணிக்கம் கார்த்திக்கிடம், ரம்யாவின் கம்பெனி வேலையை விட்டுட்டேன் என்று சொல்கிறான்.
மேலும் நீ எங்க போற என்று கேட்க, கார்த்திக் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத விஷயத்தையும்,தீபா காணாமல் போன விஷயத்தையும் சொல்கிறான். இதைக்கேட்ட மாணிக்கம், நானும் வேலையில்லாமல் சும்மா தான் இருக்கேன். உனக்கு உதவியா உன்கூட வரேன் என்று சொல்ல, கார்த்திக் மாணிக்கத்துடன் மீனாட்சியை கடத்தி வைத்திருந்த ரவுடியை பார்க்க செல்கிறான்.
அந்த ரவுடியை பார்த்து,.மிரட்டி தீபா குறித்து விசாரிக்க, நாங்க கடத்தல என்று உண்மையை சொல்கிறான்.
கைமாறிய சாவிகொத்து
மற்றொரு பக்கம், ஐஸ்வர்யா அருணாச்சலத்திற்காக விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்துகிறாள். அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, கொத்து சாவி வேண்டும் என்று சொல்ல, அருணாச்சலம் மீனாட்சியிடம் இருந்து சாவியை வாங்கி தர, ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள். ஆனால், இறுதியாக இது கனவு என தெரிய வருகிறது.
இதை அப்படியே உண்மையாக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா அதே போல் விதவிதமாக சமைத்திருக்க இதை பார்த்த அருணாச்சலம் உனக்கு அறிவு இல்லையா.. அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா, அதுவும் இல்லாமல் இன்னைக்கு அமாவாசை அப்படி இருக்கும் போது, அசைவம் சமைத்து இருக்க என்று ஆவேசப்படுகிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
ரியா என்கிட்ட ஒரு டைமண்ட் இருக்கு, அது மார்க்கெட்டில் எப்படியும் பல கோடிக்கு போகும் என்று சொல்ல, ராஜேஸ்வரி வாயை பிளந்தாள். அதனை தொடர்ந்து, ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும், வெளியே செல்லும் போது, குறி சொல்லும் பெண் ஒருவரை பார்த்தனர்.
குறி சொல்லும் பெண்ணுடன் சந்திப்பு
அந்த பெண், உங்க மனசுல எதோ ஒரு ஏக்கம் இருக்கு என்று சொன்னதும், இவர்கள் குறி கேட்க வந்திருப்பதாக கூறினர். முதலில் ராஜேஸ்வரி, இவ என் பொண்ணு, இவளோட மாமியார் ஹாஸ்பிடலில் இருக்காங்க; எப்போ சாவாங்க என்று கேட்க, அந்த பெண் அடுத்த அமாவாசைக்குள்ள செத்து போய்டுவாங்க என்று சொன்னாள்.
அடுத்து ஐஸ்வர்யா, வீட்டு கொத்து சாவி எப்போ என்னுடைய கைக்கு கிடைக்கும் என்று கேட்க, அது கண்டிப்பா உ ன் கைக்கு கிடைக்கும், ஆனால் அதுக்கு நீ கொஞ்சம் கஷ்டப்படணும். சுடுகாட்டில் ஒரு பூஜை செய்யணும், அப்படி செய்தா உன் மாமியார் செத்து போய்டுவாங்க, அதன் பிறகு ஆயுத பூஜை ஒன்னு செய்யணும்; அதன் பிறகு கொத்து சாவி உன் கைக்கு வரும் என்று சொன்னதும் இருவரும் சந்தோசப்பட்டனர். அந்த குறி சொல்லும் பெண்மணியும் இவர்களிடம் இருந்து பணத்தை கறந்தாள்.
வருத்தமான கார்த்திக்
ரம்யா கோயிலுக்கு வர, அங்கு தீபா இல்லாததால், இவ எங்க போனா? இவளை போட்டு தள்ள பிளான் போட்டது நடக்குமா? நடக்காதா? என்று புலம்பினாள் மறுபக்கம், கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர, செகண்ட் ஒப்பீனியன் கேட்க போய் இருந்தியே என்ன ஆச்சு என்று கேட்க, எல்லாரும் இதையே தான் சொல்றாங்க என்று வருத்தப்பட்டான்.
அடுத்து ரியா, சுரேஷ் போனில் இருந்து போன் செய்து ஆனந்திடம் சமாதானம் பேச, ஆனந்த், நீ சரண்டர் ஆகி தான் ஆகணும் என்று சொல்ல,.ரியா நான் சரண்டர் ஆகிடுறேன். ஆனால் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். நான் அந்த வீட்டு மருமகளாக வாழனும் என்று சொன்னாள்.
ஆனந்த் முடியாது என்று மறுக்க, கார்த்திக்கிடம் போனை கொடுக்க சொல்லி, என்னுடைய டீலுக்கு ஓகே சொல்லலைனா, உன் பொண்டாட்டியை தூக்கிடுவேன் என்று மிரட்டினாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்