Karthigai Deebam: “ரியாவை விரட்டியடிக்க கார்த்திக்கின் ஸ்கெட்ச்.. வசமாக சிக்கும் ரம்யா!” - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deebam: மது, ரியாவுக்கு போன் செய்து, நான் உன் பெயரை எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தவறாதீர்கள்.- கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deebam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா, ரம்யாவுக்கு போன் செய்து ஃபங்ஷனுக்கு கண்டிப்பாக வரணும் என்று அழைத்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கலாய்த்த மீனாட்சி - தீபா
கார்த்திக் ரியாவின் முன்னாள் கணவர் மதுவை அழைத்து ஏதோ ஒரு திட்டத்தை சொல்கிறான். இதையடுத்து, தீபா மீண்டும் ரம்யாவுக்கு போன் செய்து எங்க இருக்க? என்று விசாரிக்க, வீட்டில் இருக்கும் அவள், போகலனா கார்த்திக்கிட்ட மாடிப்போம் என்று யோசித்து காரில் வந்து கொண்டு இருக்கிறேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறாள்.
அடுத்து தீபா, மீனாட்சி ஆகியோர் அபிராமியை அலங்காரம் செய்ய ரெடியாகின்றனர். அப்போது, அபிராமியை பார்த்து யங்காக இருப்பதாகவும், மாமாவுக்கு தான் கொஞ்சம் வயசான மாதிரி இருக்கிறது என்றும் கலாய்க்கின்றனர். ரியா நான் ஆனந்தத்துடன் சேர்ந்து அபிராமி, அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என்று சவால் விட்டு இருக்கேன், அதனால், இந்த இடத்தை விட்டு போக கூடாது என்று உறுதியாக இருக்கிறாள்.
பிறகு அபிராமிக்கு மேக்கப் போட, பியூட்டிஷியன் ஒருவர் வர கார்த்திக் என் அம்மாவுக்கு நானே என் கையால் மேக்கப் போட்டு விடுறேன் என்று சொல்லி, அவனே அபிராமிக்கு மேக்கப் போட்டு விடுகிறான். இந்த நிலையில்தான் மது, ரியாவுக்கு போன் செய்து, நான் உன் பெயரை எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த அபிசோடில் நடந்தது என்ன?
ரம்யாவின் மனசாட்சி அவள் முன் தோன்றி, நீ இந்த ஃபங்ஷனுக்கு போகலனா அம்மு, ரம்யா ரெண்டு பேரும் ஒருத்தர்தான் என்ற உண்மை கார்த்திக்கு தெரிந்துவிடும் என்று சொன்னது. இதையடுத்து அவள் ரம்யாவிடம் வருகிறேன் என்று வாக்குகொடுக்கிறாள்.
கார்த்திக் பாத்துக்குவான்
இதையடுத்து தீபா, மீனாட்சி முன்னதாக கழட்டி வைத்த தாலியை எடுத்து கோயிலில் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி, கார்த்தியையும் அழைத்து சென்றாள். மறுபக்கம் அபிராமி வருத்தமாக உட்கார்ந்து இருந்தாள். இதைப்பார்த்த அருணாச்சலம் அபிராமியிடம், என்னாச்சு என்று கேட்க, ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்து விட்டாள்.
ஆனால் மீனாட்சி இந்த வீட்டில் இருந்தாலும், ஆனந்த் உடன் சேர்ந்து வாழாமல் இருக்கிறாள். ஃபங்ஷன்ல இந்த விஷயம் தெரிஞ்சா, எல்லோரும் என்ன சொல்லுவாங்க என்று வருத்தப்பட்டு புலம்பினாள். இந்த நிலையில் அபிராமியை ஆறுதல் படுத்திய அருணாச்சலம், கார்த்திக் இருக்கான்ல, அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான் என்று கூறினான். இதைத் தொடர்ந்து தீபா கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு கற்பூர ஆரத்தியை தொட்டு கும்பிடும் போது, கற்பூரம் அணைந்து விட்டது.
அடுத்ததாக ஒரு பெரிய மண்டபத்தில் 60-ம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்