வீட்டுக்கு வரும் விஜய்…சின்னத்திரையில் சிட்டாய் வரும் கோட்.. எந்த சேனல்.. எப்போது ஒளிப்பரப்பு? - முழு விபரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வீட்டுக்கு வரும் விஜய்…சின்னத்திரையில் சிட்டாய் வரும் கோட்.. எந்த சேனல்.. எப்போது ஒளிப்பரப்பு? - முழு விபரம்!

வீட்டுக்கு வரும் விஜய்…சின்னத்திரையில் சிட்டாய் வரும் கோட்.. எந்த சேனல்.. எப்போது ஒளிப்பரப்பு? - முழு விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jan 08, 2025 03:24 PM IST

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜயின் கோட் திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது

வீட்டுக்கு வரும் விஜய்…சின்னத்திரையில் சிட்டாய் வரும் கோட்.. எந்த சேனல்.. எப்போது ஒளிப்பரப்பு? - முழு விபரம்!
வீட்டுக்கு வரும் விஜய்…சின்னத்திரையில் சிட்டாய் வரும் கோட்.. எந்த சேனல்.. எப்போது ஒளிப்பரப்பு? - முழு விபரம்!

அந்த வகையில், பண்டிகை தினங்களிலும் மக்களை மகிழ்விப்பதற்காக புத்தம் புதிய திரைப்படங்கள் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை ஜீ தமிழ் வழங்குவது வழக்கமான ஒன்று; அந்த வரிசையில், வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை முடியும் வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

விஜயின் கோட்

வரும் ஜனவரி 12-ம் தேதி மாலை 6:30 மணிக்கு விஜய் நடிப்பில் வெளியாகி 2024-ன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்ற Greatest Of All Time ( GOAT ) திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. விஜயின் டபுள் ஆக்சன் திரைப்படமான கோட் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக தை பொங்கல் தினமான ஜனவரி 12-ம் தேதி காலை 9 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் மோகன சுந்தரம், சாந்தா மணி, பர்வீன் சுல்தானா என பலர் பங்குபெற மக்களுக்கு அதிக மகிழ்ச்சி தருவது நகர உணவா? கிராமத்து உணவா? என்ற தலைப்பில் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

விஷால் படம்

தொடர்ச்சியாக காலை 10.30 மணிக்கு இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படமான ரத்னம் ஒளிபரப்பாக உள்ளது.

அதன் பிறகு மதியம் 1:30 மணிக்கு ஜீ தமிழ் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் குழுவினருடன் பொங்கல் சிறப்பு சரிகமப போட்டி ஒளிபரப்பாக உள்ளது. மக்களை மகிழ்விக்கும் மிகப்பெரிய இசை விருந்தாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிரதர்

அடுத்து மதியம் 3:30 மணிக்கு ஜெயம் ரவி நடிப்பில் எம். ராஜேஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பிரதர் திரைப்படம் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. அக்கா தம்பி பாசத்தை கொண்டாடும் இப்படம் முன்னதாக திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரதர் திரைப்படத்தை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு தளபதி விஜயின் கோட் திரைப்படம் மீண்டும் ஒளிப்பரப்பாக இருக்கிறது; கோட் படத்துடன் தை பொங்கல் நிறைவு பெற, மாட்டு பொங்கலான ஜனவரி 15-ம் தேதி காலை 9 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் உறவுகள் வருகை இன்பமா? துன்பமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

தொடர்ந்து காலை 10:30 மணிக்கு கொரடலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், சோனு சூட், பூஜா ஹெக்டே என பலர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ஆச்சார்யா திரைப்படம் உங்களை மகிழ்விக்க வருகிறது.

அடுத்ததாக மதியம் 1:30 மணிக்கு ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், மதுரை என தமிழகத்தின் முக்கியமான 6 மாவட்டங்களை சேர்ந்த பிரபலங்களும் மக்களும் இந்த சிறப்பு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அன்று முதல் இன்று வரை மண்வாசனை மாறாமல் இருப்பது எங்க ஊர் தான் என 6 மாவட்டத்தை சேர்ந்த மக்களும் விவாதம் செய்ய உள்ளனர்.

டிமான்டி காலனி 2

மாட்டுபொங்கலின் நிறைவு பகுதியாக மதியம் 3:30 மணிக்கு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர், அர்ச்சனா என பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திகில் திரில்லர் திரைப்படமான டிமான்டி காலனி 2 ஒளிபரப்பாக உள்ளது.

எனவே ஜனவரி 12-முதல் 15 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் இந்த பொங்கலை கொண்டாட தயாராகுங்கள். கோட் படத்தை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசுகளையும் வெல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.