Anna Serial: ‘செளந்திரபாண்டி வைத்த செக்.. கதறும் நிர்வாகிகள்.. தலைகீழாக மாறும் எலக்ஷன்’ - அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: 20 நிர்வாகிகளின் குழந்தைகளையும் கடத்தி அங்கு பாம் வைக்கின்றனர். பிறகு சௌந்தரபாண்டியனிடம் விஷயத்தை சொல்ல, அவர் 20 நிர்வாகிகளிடமும் குழந்தைகளை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி, தனக்குத்தான் ஓட்டு போடணும் என்று மிரட்டுகிறார். - அண்ணா சீரியல் அப்டேட்!

குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.. தேர்தலில் நடக்கப் போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே பார்க்கலாம்.
அண்ணா சீரியலில் இன்று
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் பரணி 20 நிர்வாகிகளின் மனைவியோடு உள்ளே புகுந்து, சௌந்தரபாண்டியன் திட்டத்தை கொலாப்ஸ் செய்தான். தொடர்ந்து, குழந்தைகளையும் கடத்த திட்டம் போட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தேர்தலுக்காக நாமினேஷன் செய்யும் வேலைகள் நடக்கிறது. இதையடுத்து சௌந்தரபாண்டி சனியனிடம் குழந்தைகளை கடத்த சொல்லி ஏற்பாடு செய்ய சொல்கிறார். இதையடுத்து, சனியனும் இன்னொருத்தனும் சேர்ந்து, 20 நிர்வாகிகளின் குழந்தைகளையும் கடத்தி அங்கு பாம் வைக்கின்றனர். பிறகு சௌந்தரபாண்டியனிடம் விஷயத்தை சொல்ல, அவர் 20 நிர்வாகிகளிடமும் குழந்தைகளை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி, தனக்குத்தான் ஓட்டு போடணும் என்று மிரட்டுகிறார்.