Anna Serial: ‘செளந்திரபாண்டி வைத்த செக்.. கதறும் நிர்வாகிகள்.. தலைகீழாக மாறும் எலக்‌ஷன்’ - அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anna Serial: ‘செளந்திரபாண்டி வைத்த செக்.. கதறும் நிர்வாகிகள்.. தலைகீழாக மாறும் எலக்‌ஷன்’ - அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial: ‘செளந்திரபாண்டி வைத்த செக்.. கதறும் நிர்வாகிகள்.. தலைகீழாக மாறும் எலக்‌ஷன்’ - அண்ணா சீரியல் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 19, 2024 03:46 PM IST

Anna Serial: 20 நிர்வாகிகளின் குழந்தைகளையும் கடத்தி அங்கு பாம் வைக்கின்றனர். பிறகு சௌந்தரபாண்டியனிடம் விஷயத்தை சொல்ல, அவர் 20 நிர்வாகிகளிடமும் குழந்தைகளை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி, தனக்குத்தான் ஓட்டு போடணும் என்று மிரட்டுகிறார். - அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial: ‘செளந்திரபாண்டி வைத்த செக்.. கதறும் நிர்வாகிகள்.. தலைகீழாக மாறும் எலக்‌ஷன்’ - அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: ‘செளந்திரபாண்டி வைத்த செக்.. கதறும் நிர்வாகிகள்.. தலைகீழாக மாறும் எலக்‌ஷன்’ - அண்ணா சீரியல் அப்டேட்!

அண்ணா சீரியலில் இன்று 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் பரணி 20 நிர்வாகிகளின் மனைவியோடு உள்ளே புகுந்து, சௌந்தரபாண்டியன் திட்டத்தை கொலாப்ஸ் செய்தான். தொடர்ந்து, குழந்தைகளையும் கடத்த திட்டம் போட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தேர்தலுக்காக நாமினேஷன் செய்யும் வேலைகள் நடக்கிறது. இதையடுத்து சௌந்தரபாண்டி சனியனிடம் குழந்தைகளை கடத்த சொல்லி ஏற்பாடு செய்ய சொல்கிறார். இதையடுத்து, சனியனும் இன்னொருத்தனும் சேர்ந்து, 20 நிர்வாகிகளின் குழந்தைகளையும் கடத்தி அங்கு பாம் வைக்கின்றனர். பிறகு சௌந்தரபாண்டியனிடம் விஷயத்தை சொல்ல, அவர் 20 நிர்வாகிகளிடமும் குழந்தைகளை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி, தனக்குத்தான் ஓட்டு போடணும் என்று மிரட்டுகிறார்.

பதறிய நிர்வாகிகள் 

இதனால் பதறும் 20 நிர்வாகிகளின் குடும்பமும், நாங்க உங்களுக்கே ஓட்டு போட்டு விடுகிறோம். எங்கள் குழந்தைகளை எதுவும் பண்ணிடாதீங்க என்று கெஞ்சி அழுகின்றனர். அடுத்து தேர்தல் தொடங்க, 20 நிர்வாகிகளும் சௌந்தரபாண்டிக்கு ஓட்டு போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் எபிசோடில் இன்று நடப்பது என்ன? 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்தி ஆனந்த்திடம் ரியா குறித்த வீடியோ ஆதாரத்தை காட்டி உண்மையை உடைத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆனந்திற்கு தெரிய வந்த உண்மை

ஆனந்திற்கு உண்மை தெரிந்த பிறகு, ரியா கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, எல்லாரையும் பாய்ண்ட் அவுட் செய்து அதிர்ச்சி கொடுக்கிறாள். தொடர்ந்து, உங்கள் எல்லாரையும் பத்தி எனக்கு தெரியும் என்று பேச தொடங்குகிறாள்.

பிறகு கார்த்தியை நோக்கி துப்பாக்கியை வைத்து, என்னை ஏத்துக்கோங்க உங்களை உயிரோட விட்டுடுறேன் என்று மிரட்டுகிறாள். இதனால் எல்லாரும் பதற்றம் அடைய, கார்த்திக்கோ நீ செய்தது ரொம்ப தப்பு, உன்னை எங்களால் ஏத்துக்க முடியாது என்று சொல்கிறான்.

குண்டுகளை வாங்கிய அபிராமி - நொடியில் காப்பாற்றப்பட்ட கார்த்திக்.. அதிர்ச்சியில் குடும்பம்

என்னுடைய வாழ்க்கை இப்படி ஆக நீ தான் காரணம், அப்போ நீ தான் சாகனும் என்று சுட துணிகிறாள். இந்த சமயத்தில், அபிராமி ஓடி வந்து கார்த்தியை காப்பாற்றி, குண்டை தான் வாங்கி கொள்கிறாள். இதையடுத்து அபிராமியின் உடம்பில் மூன்று குண்டுகள் பாய, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: