'கேவலப்படுத்தும் நயன்தாரா.. முதுகெலும்பே இல்லாதவர்கள்.. தலையாட்டி பொம்மை' விளாசும் பிஸ்மி
நடிகை நயன்தாரா தனது செயல்கள் மூலம் சினிமாவையே கேவலப்படுத்தி வருகிறார் என பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி விமர்சித்துள்ளார்.

'சினிமாவைக் கேவலப்படுத்தும் நயன்தாரா.. முதுகெலும்பே இல்லாதவர்கள்..' விலாசும் பிஸ்மி
நயன்தாரா தனுஷிற்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் பற்றிய செய்திகளும் வதந்திகளும் வெகுவாக பரவி வரும் நிலையில், நயன்தாரா வலைப்பேச்சு யூடியூபர்கள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து வலைப்பேச்சு யூடியூபர்ஸ் நயன்தாராவை பயங்கரமாக விமர்சிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான வலைப்பேச்சு பிஸ்மி, நயன்தாரா குறித்து மீடியா சர்க்கிள் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
முதுகெலும்பற்ற தயாரிப்பாளர்கள்
அந்தப் பேட்டியில், "நயன்தாரா ஷூட் முடிந்ததும் எனக்கும் ஒரு மானிட்டர் போட வேண்டும் எனக் கேட்பது குறித்து நான் அவர்களை தப்பு சொல்ல மாட்டேன். தயாரிப்பாளர்கள் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
