Yashika anand: மார்பில் பச்சைக்குத்திய ரசிகர்.. ‘ ‘அய்யோ எவ்வளவோ வலிச்சிருக்கும்’ - யாஷிகா ஆனந்த் பதில்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yashika Anand: மார்பில் பச்சைக்குத்திய ரசிகர்.. ‘ ‘அய்யோ எவ்வளவோ வலிச்சிருக்கும்’ - யாஷிகா ஆனந்த் பதில்!

Yashika anand: மார்பில் பச்சைக்குத்திய ரசிகர்.. ‘ ‘அய்யோ எவ்வளவோ வலிச்சிருக்கும்’ - யாஷிகா ஆனந்த் பதில்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 18, 2025 01:13 PM IST

Yashika anand: எனது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை பார்த்தேன். அவ்வாறு செய்த போது எவ்வளவு வலித்திருக்கும். - யாஷிகா பதில்

Yashika anand is hurt thinking about the fan who tattooed her photo
Yashika anand is hurt thinking about the fan who tattooed her photo

ரசிகருக்கு பதில்

ஆம், யாஷிகாவின் ரசிகர் ஒருவர் அவரின் புகைப்படத்தை தன்னுடைய மார்பில் பச்சைக்குத்தி, அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், இதனைப்பார்த்த யாஷிகா ஆனந்த், எனது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை பார்த்தேன். அவ்வாறு செய்த போது எவ்வளவு வலித்திருக்கும். ஏன் இப்படி செய்கிறீர்கள். உங்களது அம்மாவை சந்தோஷப்படுத்துங்கள். அதுதான் எனக்கு சந்தோஷம்.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

யாஷிகா ஆனந்திடம் எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் X Ray கண்கள் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள் கைவசம் இருக்கின்றன.

முன்னதாக, கடந்த ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் யாஷிகா சிக்கினார். அந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்திற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் ஆறு மாதங்களாகச் சிகிச்சை பெற்று மீண்டார். 

யாஷிகாவிற்கு கை, கால், இடுப்பு பகுதிகளில் எலும்புகள் முறிந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் விபத்தில் அவரது நெருங்கிய தோழியான பவனி ஷெட்டி என்பவர் உயிரிழந்தார். விபத்தில் இருந்து மீண்ட யாஷிகாவால் தன் தோழியின் இழப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை. தன் தோழியின் உயிரிழப்பிற்கு தானே காரணமாகி விட்டேன் என பல முறை அவர் ரசிகர்களிடம் அழுது பதிவுகளை வெளியிட்டார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.