தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Yashika Aannand Appeared In The Chengalpattu Court In The Car Accident Case

பிடிவாரண்ட்.. பதறிப் போய் ஆஜரான யாஷிகா.. மாஸ்க், கூலிங்கிளாஸ் ‘மாஸ்’ மாறல!

HT Tamil Desk HT Tamil
Mar 28, 2023 10:33 AM IST

Yashika Aannand: செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிமன்ற அலுவலகத்திற்கு வெளியே நடிகை யாஷிகா ஆனந்த் பல மணி நேரமாக காத்திருந்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜரானார்.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த யாஷிகா ஆனந்த்
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த யாஷிகா ஆனந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

சம்பவம் நடந்தது எப்படி?

ஜூலை மாதம் 2021, நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி வள்ளிசெட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32) ஆகியோர் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றனர். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 12 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டிருந்தனர். காரை நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்தார். மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நடிகை யாஷிகாஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் அலறி துடித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து யாஷிகா ஆனந்திற்கு முதுகு தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்

ஒருபுறம் யாஷிகா ஆனந்த் உடல்நிலை சீரடைந்து படங்களில் நடித்துக் கொண்டும் மற்றும் சமூக வலைதளம் மூலமாக தனது ரசிகர்கள் வட்டாரத்தில் ஆக்டிவாக இருந்து வந்தாலும், மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இந்த வழக்கு விசாரணைக்காக மார்ச் மாதம் 21ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகாததை தொடர்ந்து, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகவில்லை என்றால் காவல்துறையினர் கைது செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சரணடைந்த நடிகை யாஷிகா

இதனை அடுத்து இன்று செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரீ கால் மனு அளித்திருந்த நடிகை யாஷிகா, நேரில் ஆஜரானார். இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிமன்ற அலுவலகத்திற்கு வெளியே நடிகை யாஷிகா ஆனந்த் பல மணி நேரமாக காத்திருந்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி முன்னிலையில் ஆஜராகிய நடிகை யாஷிகா, வருகின்ற ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.