Vairamuthu: ‘ஆக்டோபஸ் கரங்கள்.. கண்ணீர் வடிக்கிறேன்’ - வைரமுத்து சோக பதிவு!
பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன - வைரமுத்து!

வைரமுத்து!
சென்னையில் மிகவும் பிரலமான திரையரங்காக இருந்து வந்தது உதயம் தியேட்டர். அசோக் நகரில் அமைந்துள்ள அந்த திரையரங்கில் மொத்தம் 4 திரைகள் இருக்கின்றன. குறைந்த விலையில் படம் பார்க்க ஏதுவாக இந்த திரையரங்கம் இருந்த காரணத்தால், இங்கு நடுத்தர மக்களின் வரத்து அதிகமாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் வந்த மல்டிப்ளக்ஸ் - களின் எண்ணிக்கையாலும், ஓடிடியின் வரத்தாலும் பல திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது உதயம் திரையரங்கமும் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து பாடலாசியர் வைரமுத்து தன்னுடைய சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.