Meera Vijay Antony: “எங்கிட்டயாவது சொல்லி இருக்கலாமே” - கல்லறைத்தோட்டத்தில் விஜய் ஆண்டனி மனைவி உதிர்த்த வார்த்தைகள்!
முதல் கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த மீரா, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மனஅழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த மீரா, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மனஅழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விஜய் ஆண்டனியின் மகள் உடல் நேற்று அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரை பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று காலை அவருக்கான இறுதி சடங்கள் நிகழ்த்தப்பட்ட கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது கடைசியாக தன்னுடைய "கருவறையில் உன்னை சுமந்தேன்.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்" பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்கொலை தீர்வல்ல:
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்