இந்த வாரம் டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதல் இடம்.. முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் சன் டிவி.. அப்போ விஜய் டிவி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இந்த வாரம் டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதல் இடம்.. முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் சன் டிவி.. அப்போ விஜய் டிவி?

இந்த வாரம் டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதல் இடம்.. முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் சன் டிவி.. அப்போ விஜய் டிவி?

Marimuthu M HT Tamil
Updated Oct 11, 2024 08:38 AM IST

Serials TRP: இந்த வாரம் டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதல் இடம்.. முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் சன் டிவி.. அப்போ விஜய் டிவி?

டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதல் இடம்.. முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் சன் டிவி.. அப்போ விஜய் டிவி?
டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதல் இடம்.. முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் சன் டிவி.. அப்போ விஜய் டிவி?

கயல்:

சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், கயல். அக்டோபர் 25, 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த நெடுந்தொடர் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. தந்தையை இழந்து குடும்பத்தின் மொத்த பொறுப்புகளையும் தூக்கி சுமக்கும் மகளாக ’கயல்’ என்னும் இளம் பெண் இருக்கிறார்.

அவர் செய்யும் செயல்களுக்குப் பல்வேறு தடைகள் எழுகின்றன. போதாக்குறைக்கு அவரது திருமணத்தை நிறுத்த அவரது நெருங்கிய சொந்தங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. அதை எல்லாம் சமாளித்து பிரச்னைகளை முறியடிக்கிறார், கயல்.

கயல் சீரியல், 9.59 புள்ளிகளுடன் டி.ஆர். பியில் முதல் இடத்தில் இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த, கயல், எழில் திருமணம் தற்போது நடக்கப்போகிறது. மண்டபம் வரை வந்துவிட்ட இந்த திருமணத்தைத் தடுக்க ஒரு பக்கம் பெரியப்பாவின் குடும்பம், மறுபக்கம் எழிலின் குடும்பத்தினர் செய்யும் சதிகள் ஒவ்வொன்றாக முறியடிக்கப்படுகின்றன. இதையெல்லாம் சமாளிக்கும் முயற்சியில் இருக்கும் கயலின் திருமணம் வெற்றிகரமாக நடந்ததா இல்லையா என்பதே பல ரசிகர்களின் தவிப்பாக இருக்கிறது.

மூன்று முடிச்சு:

சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ’மூன்று முடிச்சு. இந்த வாரம், 8.35 டி.ஆர்.பி புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் கதையின் நாயகன், தன் திருமண நாளில் சடாரென கல்யாணத்தை நிறுத்திவிட்டு தான் நேசித்த கிராமத்துப் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டார். அடுத்தடுத்து டிவிஸ்ட் தரும் மூன்று முடிச்சு சீரியலின் கதை, பல ரசிகர்களைக் கடந்த வாரம் ஈர்த்திருக்கிறது.

சிங்கப்பெண்ணே:

கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த இளம்பெண் ஆனந்தி, குடும்ப கஷ்டத்தைப் போக்க சென்னை வருகிறாள். வேலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை என்னவாகிறது என்பதே சிங்கப்பெண்ணே கதை. சமீபத்தில் தொடங்கிய இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இந்த வார டிஆர்பியில் மூன்றாவது இடத்தினைப் பிடித்திருக்கிறது. இந்த வாரம் 8. 26 டிஆர்பி புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

மருமகள்:

'மருமகள்' என்ற புதிய சீரியல் சன் தொலைக்காட்சியில் ஜூன் 10 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த புதிய சீரியல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாக உள்ளது. கேப்ரியல்லா ஆதிரை என்னும் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஆதிரையை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார், பிரபு. ஆனால் ஒரு பக்கம் கல்யாண செலவை நினைத்து அவர் பயத்திலும் இருக்கிறார். எல்லாவற்றிலும் கணக்கு பார்க்கும் அவர், திருமணத்திலும் அதையே பின் செய்கிறார். இதனால் வரும் பிரச்னைகளையும் எதிர்கொள்கிறார். இந்த சீரியல், 7.85 டி.ஆர்.பி புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

சுந்தரி:

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், சுந்தரி. இந்த வார டிஆர்பி 7.85 புள்ளிகள் பெற்று ரேட்டிங் லிஸ்டில் 4ஆவது இடத்தில் சுந்தரி இருக்கிறது. மாவட்ட ஆட்சியராக இருக்கும் சுந்தரி, ஆதரவற்ற சிறுமியின் மாற்றந்தாயாக இருந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வது ரசிகர்களைக் கவர்ந்து உள்ளது.

சிறகடிக்க ஆசை:

தினமும் விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், சிறகடிக்க ஆசை. இதில் மூன்று சகோதர்கள் கொண்ட குடும்பத்தில் கார் ஓட்டி முன்னேறும் இரண்டாவது சகோதரர் முத்து மற்றும் அவரது மனைவி மீனாவின் வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றி ‘சிறகடிக்க ஆசை’ பேசுகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பியில் 7.76 டி.ஆர்.பி புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.