‘குடும்பத்துல அந்த கவலை இருக்கு.. கேட்குறாங்க.. வருத்தம் தான்’ வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘குடும்பத்துல அந்த கவலை இருக்கு.. கேட்குறாங்க.. வருத்தம் தான்’ வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!

‘குடும்பத்துல அந்த கவலை இருக்கு.. கேட்குறாங்க.. வருத்தம் தான்’ வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 05, 2025 12:37 PM IST

‘படித்திருக்கிறேன், இடம் வாங்கியிருக்கிறேன், வீடு கட்டியிருக்கிறேன், மருத்துவமனை கட்ட இடம் வாங்கியிருக்கிறேன், யார் என்னை கேள்வி கேட்க முடியும்? நான் புரிதல் உள்ளவனாக மேலே சென்று கொண்டிருக்கிறேன். இதனால், எனக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தான், என் குடும்பத்தார் என்னை கேள்வி கேட்டார்கள்’

‘குடும்பத்துல அந்த கவலை இருக்கு.. கேட்குறாங்க.. வருத்தம் தான்’ வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!
‘குடும்பத்துல அந்த கவலை இருக்கு.. கேட்குறாங்க.. வருத்தம் தான்’ வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!

எந்த ஆசிரியர் வந்தாலும், அவர்களை இமிடேட் பண்ணுவேன். அதை மாணவர்கள் ரசிப்பார்கள். எனக்குத் திருமணம் ஆகவில்லை என்பதால் பெற்றோருக்கு வருத்தம் இருக்கிறது. நான் மெஜ்ஜூரா இருக்கேன். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால், வீட்டில் இருப்பவர்கள் ‘ஏம்ப்பா சீக்கிரம் முடிக்கணும்.. முடிச்சே ஆகணும்’ என்று சொல்வார்கள். சில இது வரும் போது, ‘அம்மா இது எனக்கு செட் ஆகாது.. கொஞ்சம் வெயிட் பண்ணலாம்’ என்று நான் கூறுவேன். 

என் நகைச்சுவை என் தொழிலுக்கு உதவுகிறது

என் நகைச்சுவை, என் டாக்டர் தொழிலை ஓவர்டேக் செய்வதாக நான் நினைக்கவில்லை அதை நான் ப்ளஸ் ஆக தான் பார்க்கிறேன். நான் யார் மனதையும் புண்படுத்துவதில்லை. பார்த்ததும் எல்லாரையும் கவர்ந்து இழுக்க கூடியது என் நகைச்சுவை. அது என் தொழிலை பெருமைபடுத்துகிறது. துபாய் போய் வந்தேன். அங்கு நான் அணிந்த உடைகளால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதன் மூலம் எனக்கு நிறைய நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். 

நான் விபரமாக இருப்பதால், என்னை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. என் சொந்த விவகாரங்களை நானே பார்த்துக்  கொள்கிறேன். படித்திருக்கிறேன், இடம் வாங்கியிருக்கிறேன், வீடு கட்டியிருக்கிறேன், மருத்துவமனை கட்ட இடம் வாங்கியிருக்கிறேன், யார் என்னை கேள்வி கேட்க முடியும்? நான் புரிதல் உள்ளவனாக மேலே சென்று கொண்டிருக்கிறேன். இதனால், எனக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தான், என் குடும்பத்தார் என்னை கேள்வி கேட்டார்கள். இது எனக்கு ப்ளஸ் தானே கொடுக்கிறது. பிறகு ஏன் அவர்கள் கேள்வி எழுப்பப் போகிறார்கள்?

என்னை பிடிக்காதவர்கள் யார்?

அதையும் மீறி, என்னை பிடிக்காதவர்கள் இருப்பார்கள். அவர்கள் 2 சதவீதம் பேர் தான். அவர்களை எதுவும் செய்ய முடியாது. என் நண்பர் ஒருவரே, ‘என்னடா.. தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண்ணோட காலை பிடிச்சு அழுதுட்டு இருக்க’ என்று கேட்டார். ‘டேய் என்னடா பேசுற.. அது கலை.. அதுல என்னடா தப்பு’ என சண்டை போட்டுக் கொண்டோம். அவன் ஒரு ஃசை டைப். மேடையை கண்டு பயப்படுவான். அப்படி பட்டவர்கள், இதை விரும்பமாட்டார்கள். 

பள்ளியிலேயே நான் மைக் பிடித்துவிட்டேன். கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கத் தொடங்கினேன். ப்ளஸ் வரும் மைனஸ் வரும். எனக்கு கோபம் எப்போ வரும், ஆபாசமாக கமெண்ட் செய்பவர்கள் மீது வரும். பயங்கர கோபம் வரும். நான் ப்ளாக் பண்ணிவிடுவேன். அது ஒன்று தான் வருத்தம். சில நேரங்களில் நான் செலிபிரிட்டியாக மாறும் போது, தனிமனித சுதந்தரம் பாதிக்கப்படத் தான் செய்யும். அது கடவுள் நமக்கு எழுதியது. 

என் திறமையை காட்ட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதை பொழுதுபோக்காக வெளிப்படுத்த  விரும்பவில்லை. நான் சீரியஸாக தான் வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்தேன். நாம் ஆபாசமாக எதாவது செய்யும் போது தான், குடும்பம் அதனால் கூனி குறுகும்,’’

என்று அந்த பே்டடியில் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டியில் கூறியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.