Bigg Boss Archana : என்ன மரியாதை .. பிக் பாஸிலிருந்து வெளிவந்து அர்ச்சனா பேசிய முதல் நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த வெளியே சென்ற அர்ச்சனா முதலாவதாக விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த பீரவினை சந்தித்து உள்ளார்.
பிக் பாஸ் தமிழ் 7 மிகவும் பிரம்மாண்டமான இறுதி போட்டி கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நடந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜே அர்ச்சனா பிக் பாஸ் 7 ஆவது சீசன் டைட்டில் கோப்பையை பெற்றார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் பட்டத்தை வென்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற பெருமையை விஜே அர்ச்சனா உருவாக்கினார். சுவாரஸ்யமாக, அவர் நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி வழியாக நிகழ்ச்சிக்குள் சென்ற அர்ச்சனா, டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரன்னராக மணி தேர்வு செய்யப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றிலேயே வைல்டு கார்டு என்ட்ரி வழியாக உள்ளே வந்து டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போட்டியாளராக அர்ச்சனா மாறி இருப்பது அனைவருக்கு ஆச்சரியம் தரும் விஷயமாக மாறி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் 7 இல் அர்ச்சனா தனது வலுவான விளையாட்டின் மூலம் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றார். உண்மையில், பிக் பாஸ் தமிழ் 7 இல் அர்ச்சனா வெற்றி பெற்றார் என்ற செய்திகள் இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
பிக் பாஸ் சீசன் முடிந்தாலும், அதில் பங்கேற்று வெளியில் வந்தவர்களின் அலப்பறை இன்னும் முடியவில்லை. டைட்டில் வென்ற அர்ச்சனா எந்த ஒரு பதிவும் வெளியிடாமல் மவுனமாக இருந்த நிலையில் மற்ற போட்டியாளர்கள் தான் அலப்பறை செய்து வருகிறார்கள்.
நிகழ்ச்சி முடிந்து கிட்டதட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு அர்ச்சனா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “ அதில், ” பீரவீன் சார், உங்கள் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்தின் சிம்பொனி. ஒரு நல்ல ஆசிரியரின் மந்திரம். உங்கள் அன்புடன் தொடர்ந்து வழி நடத்தியதற்கு மிக்க நன்றி- என்றென்றும் உங்கள் மாணவர் ” எனக் குறிப்பிட்டு இருந்தார்.'
இதனிடையே நிகழ்ச்சி முடிந்த வெளியே சென்ற அர்ச்சனா முதலாவதாக விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த பீரவினை சந்தித்து உள்ளார்.
இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியீட்டு உள்ளார். அதில், “ உங்கள் அனைத்து வழி காட்டுதலுக்கும் நன்றி பிரவின் ஐயா. உங்கள் வழி காட்டுதலின் மூலம், என்னால் உச்சம் அடைய முடியும்.
இந்த அற்புதமான வீடியோவிற்கு நன்றி அக்கா. உங்கள் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். உற்சாகமான உள்ளடக்கத்திற்கு “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பதால் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா, மொத்தம் 77 நாட்கள் விளையாடி உள்ளார்.
ஒரு நாளைக்கு அர்ச்சனாவுக்கு சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 77 நாட்கள் அவருக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.