ஒரு மணி நேரத்திற்கு எவ்ளோ? நடிகையின் போட்டோவிற்கு வந்த எல்லை மீறிய கமெண்டுகள்.. கொதிக்கும் நடிகையின் குடும்பம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு மணி நேரத்திற்கு எவ்ளோ? நடிகையின் போட்டோவிற்கு வந்த எல்லை மீறிய கமெண்டுகள்.. கொதிக்கும் நடிகையின் குடும்பம்

ஒரு மணி நேரத்திற்கு எவ்ளோ? நடிகையின் போட்டோவிற்கு வந்த எல்லை மீறிய கமெண்டுகள்.. கொதிக்கும் நடிகையின் குடும்பம்

Malavica Natarajan HT Tamil
Published Oct 30, 2024 02:18 PM IST

தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகளான ஸாரா இரவு நேரத்தில் சாலை ஓரமாக நின்று எடுத்த புகைப்படத்திற்கு எல்லை மீறும் விதமாக பலரும் ஆபாச கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு எவ்ளோ? நடிகையின் போட்டோவிற்கு வந்த எல்லை மீறிய கமெண்டுகள்.. கொதிக்கும் நடிகையின் குடும்பம்
ஒரு மணி நேரத்திற்கு எவ்ளோ? நடிகையின் போட்டோவிற்கு வந்த எல்லை மீறிய கமெண்டுகள்.. கொதிக்கும் நடிகையின் குடும்பம்

டாக்டர் பட நடிகைக்கு ஆபாச கமெண்ட்

இதையடுத்து, அர்ச்சனாவும் அவரது மகள் ஸாராவும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அப்லாஸ் வாங்கி இருப்பர். அர்ச்சனாவின் கெரியரில் அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து, அமைதியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழக்கையில், இப்போது நெட்டிசன்களால் மீண்டும் புயல் ஒன்று வீசியுள்ளது.

அர்ச்சனாவின் மகள் ஸாரா, அவரது தந்தையுடன் சேர்ந்து, அவரது அலுவலகத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்தததும், அவரது தந்தை ஸாராவை சாலை ஓரத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ஸாரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததே அத்தனை பிரச்சனைக்கும் காரணம்.

புகைப்படத்தால் கிளம்பிய பூகம்பம்

விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற ஸாரா, கருப்பு நிற சேலையில், தலை முடியை விரித்து, கையில் சிவப்பு நிற ஹேண்ட் பேக்குடன் சென்றுள்ளார். இந்த உடையுடனும், கைப்பையுடனும் அவர் இரவில் சாலை ஓரம் நின்று எடுத்த போட்டோ பார்ப்பவர்களுக்கு ஆபாசமாக தெரிந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

இந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடத் தொடங்கிய உடனே, ஸாராவைப் பார்த்து பலரும் ஆபாச வேலை செய்யும் பெண்கள் உள்ள ரெட் லைட் ஏரியாவா இது என மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்துள்ளனர். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆபாச தொழிலில் ஈடுபட ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு காசு வாங்குவீர்கள், பைபாஸ் ரோட்டில் செல்லும் போது, அங்கு நிற்கும் விலைமாதர்கள் நினைவுக்கு வருகிறார்கள் என எல்லை மீறி மிகவும் ஆபசமாக கருத்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் பதிலடி

தனது தந்தையுடன் அவரது அலுவலகத்திற்கு சென்ற பெண், தான் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் எல்லை மீறி இப்படி கமெண்டுகள் வரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸாரா, இப்படி ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "ரெட் லைட் ஏரியா?" "ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு" "பைபாஸ் ரோடு நினைவுக்கு வருகிறது" "என்னுடன் தூங்குவீர்களா" என்பதை கடந்து நான் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பாத பல மோசமான கமெண்டுகளைப் பார்த்தேன். எனது சமீபத்திய போஸ்டிற்காக வந்த கமெண்டுகள் இவை. இது மனதை மிகவும் வருத்தமாக மாற்றியது.

ஆண்கள், பெண்களை இவ்வளவு எளிதாக ஆபாசமாகவும், அருவருப்பாகவும் விமர்சிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டதில் நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். நான் பதிவிட்ட படங்கள், என் தந்தையால் எடுக்கப்பட்டது. எனது அப்பா வேலை செய்யும் இடத்திற்கு குடும்பமாக உணவருந்த சென்றபோது எடுத்தப் படம்.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாமா?

சேலை அணிந்த ஒரு பெண், நன்றாக மேக்கப் செய்துகொண்டு ஒரு சாலையின் ஓரத்தில் நின்று நான் புகைப்படம் எடுத்தால் நீங்கள் நினைக்கும் படியான பெண்ணாக நான் மாறிவிடுவேனா? அல்லது நீங்கள் விரும்பியதை அந்தப் பெண்ணிடம் கூறலாம் என்ற கட்டாயம் உள்ளதா?

ஒரு பெண் அவரது சோசியல் மீடியாவில் புகைப்படத்தை பதிவிட்டால் நீங்கள் விரும்பியதைச் சொல்லலாம் அல்லது செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு பிரச்சனை என்பது நீங்கள் தான். நான் உடை உடுத்தும் விதம், நான் என்னை அலங்கரிக்கும் விதம், எனது சோசியல் மீடியாவில் நான் எவ்வாறு பதிவிடுகிறேன் என்பதில் இல்லை.

நான் உடுத்தும் உடைகளும், போடும் பதிவுகளும் என்னை நேசிக்கும் மக்களுக்காக மட்டுமே. எனக்காக தொடர்ந்து அன்பை அளித்து வரும் மக்களுக்கு நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது இந்தப் பதிவு முகம் தெரியாத, வெட்கமற்ற, கேவலமான மனிதர்கள் அனைவருக்குமானது. உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்களைப் போன்ற வெக்கமற்ற கோழைத்தனமான ஆண்களால் அவர்கள் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகக் கூடாது என்பதற்காக.

அசிங்கத்தை நிறுத்த வேண்டிய நேரம்

இதுபோன்ற அசிங்கமான செயல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதைப் இப்படியே வளரவிடாமல் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. என பதிவிட்டு தன்னை மிக மோசமான வார்த்தைகளால் தாக்கியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.