ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்! சிறகடிக்க ஆசையில் மாட்டப்போகும் ரோகிணி! டிஆர்பி எகிறுமா?
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சிறக்கடிக்க ஆசையின் முக்கியமான தருணமான மனோஜ் மற்றும் ரோகிணி குடும்பத்தினரிடம் மாட்டிக்கொள்ளக் கூடிய நிகழ்வு நடக்கப் போகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் மிகவும் விறுவிறுப்பாக சென்றுள்ளது. விஜய் டிவியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பல உள்ளனர். இந்த சீரியல் தான் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. அந்த அளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல் பல ரசிகர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த கதையில் வரும் மூன்று ஜோடிகள் தான் இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்கள் மூவரை வைத்து தான் இந்த கதை நகர்கிறது.
பிடிபடாமல் இருக்கும் ரோகிணி
கதையின் நாயகனாக கருதப்படும் முத்து கார் டிரைவர் ஆக இருக்கிறார். மேலும் இவரது மனைவி மீனா பூக்கட்டும் வேலை செய்து வருகிறார். முத்துவின் அண்ணனான மனோஜ் அதிகm பொய் பேசக்கூடிய திருட்டியில் ஈடுபடக்கூடிய ஒரு நபராக இருந்து வருகிறார். இவரது மனைவி ரோகிணியும் இவருக்கு எந்த விதத்திலும் சளைக்காத அளவிற்கு பொய் கூறி அவரை திருமணம் செய்து அடிக்கடி திருட்டிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பல தவறுகளை செய்து வரும் ரோகிணி இது வரை எந்த தவறுக்காகவும் மாட்டிக்கொள்ள வில்லை.
ரோகிணி பிடி படாமல் இருந்து வருவதே சீரியல் ரசிகர்களுக்கு தொய்வை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் நீண்ட நாட்களாக மறைக்கபட்ட உண்மை ஒன்று நாளை வெளிவரப்போகிறது. அதற்கு மனோஜின் முன்னாள் காதலியே காரணமாக இருக்கப் போகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி வாங்கிய வீடு ஏமாற்றப்பட்ட வீடு எனத் தெரியவந்துள்ளது. மேலும் நாளைய சூப்பரான டுவிஸ்ட்க்கான புரோமோவும் வெளியாகி உள்ளது.