ஆடிஷனில் செலக்ட் செய்த வெற்றிமாறன்.. தனுஷுக்கு ஜோடியாகும் வாய்ப்பை நிராகரித்த சீரியல் நடிகை! பின்னணி என்ன?
இயக்குநர் வெற்றிமாறன் ஆடிஷன் நடத்தி தனுஷ் ஜோடியாக நடிக்க தேர்வு செய்த போதிலும், அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் பிரபல சீரியல் நடிகை. இந்த பிளாஷ்பேக் சம்பவம் குறித்து அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சினிமா ஹீரோயின்கள் போல் சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் பல்வேறு ஹீரோயின்களுக்கும் ஏராளமான அளவில் ரசிகர்கள் பட்டாளமும், சோஷியல் மீடியாக்களில் அவர்களை பின் தொடர்வோரும் இருக்கிறார்கள். இதில் ஒரு சில சீரியல் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால், உடனடியாக ஒகே சொல்லிவிட்டு சினிமா ஹீரோயின்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
அப்படியொரு வாய்ப்பு அதுவும் முன்னணி இயக்குநர், டாப் ஹீரோ என பிரபல சீரியல் நடிகை ஒருவருக்கு கிடைத்தபோதிலும் அதை ஏற்காமல் நிரகரித்துள்ளார். இதைப் பற்றி அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் ஜோடியாக நடிக்க மறுப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றி காம்போவாகவே வலம் வந்துள்ளது.
வெற்றிமாறன் - தனுஷ் ஆகியோர் பொல்லதவன் படத்தில் தங்களது பயணத்தை தொடங்கிய நிலையில் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்துள்ளன.
அந்த வகையில் அசுரன் படத்தில், தனுஷ் ஜோடியாக நடிப்பதற்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியாவை, வெற்றிமாறன் தேர்வு செய்திருந்தாராம். ஆனால் தனுஷுடன் இணைந்து நடிப்பதற்கு கோமதி பிரியா மறுப்பு தெரிவித்ததோடு, தனக்கு வந்த நல்ல வாய்ப்பையும் நிரகாரித்துள்ளார்.
அம்மு அபிராமிக்கு சென்ற வாய்ப்பு
இதுகுறித்து நடிகை கோமதி பிரியா பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், "சீறகடிக்க ஆசை சீரியலுக்கு முன் தெலுங்கு சீரியலில் நடித்து வந்தேன். என நடிப்பை பார்த்து வியந்த வெற்றிமாறன் ஆடிஷன் செய்து, அசுரன் படத்தில் இளவயது தனுஷ் ஜோடியாக நடிக்க தேர்வு செய்திருந்தார்.
படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி பகுதிகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நான் தெலுங்கு சீரியல் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தேன். கால்ஷீட் பிரச்னை காரணமாக அசுரன் பட வாய்ப்பை நிராகரிக்க வேண்டியிருந்தது." என்றார்.
கோமதி பிரியா நடிக்க மறுத்த நிலையில், அந்த வாய்ப்பு அம்மு அபிராமிக்கு சென்றது. படத்தின் மிகவும் அழுத்தமான அந்த கதாபாத்திரத்தில் அம்மு அபிராமியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நல்ல வாய்ப்பை மிஸ் செய்ததது குறித்து கோமதி பிரியா கூறியதாவது, "சூப்பரான வாய்ப்பை மிஸ் பண்ணியதற்காக தான் வருந்தவில்லை. அதை ஏற்றிருந்தால் என்னுடைய பாதை தற்போது சினிமா பக்கம் சென்றிருக்கும். இருப்பினும் சீரியலில் நடித்து வருவது சந்தோஷமான விஷயமே" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: எடை கூடி.. மன அழுத்தத்தில் சிக்கி.. அபிராமி வேதனை
சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியில் நம்பர் 1 டிஆர்பியை பெற்றிருக்கும் இந்த சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு ஆகிறது. இதில் கதையின் நாயகனாக வெற்றி வசந்த நடிக்கிறார். நாயகியாக கோமதி பிரியா ஹோம்லியான கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மனதை கவர்ந்து வருகிறார்.
