இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக.. அமரன் முதல் அரண்மனை வரை.. பொங்கலுக்கு டிவியில் வரிசை கட்டும் திரைப்படங்கள்!
பொங்கல் பண்டிகையன்று டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி இடத்தை வகிக்கும் விஜய்டிவி, பண்டிகை காலங்களில், அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஒளிப்பரப்புவது வழக்கமான ஒன்றுதான்; அந்த வகையில், இந்த 2025 பொங்கல் அன்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
பொங்கல் 2025 சிறப்பு திரைப்படங்கள்:
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று ஒளிப்பரப்பாக இருக்கிறது. இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்ச்சிகரமான திரைப்படமாக இந்தப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பள்ளி மற்றும் வாழை தோட்ட வேலைகளை சமாளிக்கும் சிறுவனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இப்படம், கிராமப்புற வாழ்வின் சிக்கல்களையும் குழந்தைகளின் மனவலிமையையும் நெகிழ்ச்சியாக காட்டியது. இந்தத்திரைப்படம் ஜனவரி 14ம் தேதி 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
அமரன்
இராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்ச்சிகரமான திரைப்படமாக வெளியான திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், நாட்டின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியது. இந்தத்திரைப்படம் ஜனவரி 14 மாலை 6:00 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
அரண்மனை4
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4; காமெடி-ஹாரர் ஜானரில் வெளியான இந்தப்படத்தில், பாரம்பரிய அரண்மனைக்கு குடியேறும் குடும்பம், அதில் இருக்கும் பிணி ஆத்மாவின் மர்மங்களை வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறது. சுந்தர் சி, தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நகைச்சுவையும் திகிலையும் கலந்த ஒரு பரபரப்பான அனுபவமாக ரசிகர்களுக்கு அமைந்தது. அரண்மனை 4 திரைப்படம் ஜனவரி 15 காலை 11.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
மஞ்சும்மல் பாய்ஸ்
சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய மஞ்சும்மல் பாய்ஸ் ஒரு திரில்லர் திரைப்படமாகும். கொடைக்கானலில் சுற்றுலா செல்லும் நண்பர்கள் குழுவில் ஒரு நண்பன் பாதாள குகையில் விழுந்துவிடுகிறார். அவரை காப்பாற்ற அவனது நண்பர்கள் மற்றும் மலைப்பகுதியின் அதிகாரிகள் பாடுபடுகிறார்கள். இறுதியில் என்ன நடந்தது? அந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை சுவாரஸ்யமாக திரையமைக்கப்பட்டுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஜனவரி 15 மாலை 3:00 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
மெய்யழகன்
சி. பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகிய மெய்யழகன், குடும்ப உறவுகளின் மதிப்பையும்,நெகிழ்ச்சியையும் உணர்த்தும் திரைப்படமாகும். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் அருமையான நடிப்பு இப்படத்திற்கு அழுத்தமான உணர்வை கொடுக்கின்றன. மெய்யழகன் திரைப்படம் ஜனவரி 15 மாலை 6:00 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்