Vijay sethupathi: என் மக எனக்கு அம்மா.. அவன் அப்பா.. நான் அப்பா மாதிரி நடந்துக்கிட்டதே' - நெகிழ்ந்த விஜய் சேதுபதி!
Vijay sethupathi: “அவர்கள் என்னை அதிகாரம் செய்வார்கள். நான் தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களை அவர்களோடு கலந்து கொள்வேன்” - விஜய் சேதுபதி!

நடிக்ர் விஜய் சேதுபதி தனது குழந்தைகளிடம், தான் எப்போதும் ஒரு தந்தை போல நடந்து கொள்வதில்லை என்று பேசி இருக்கிறார்.
அவர்கள் என்னை அதிகாரம் செய்வார்கள்
இது குறித்து விஜய் சேதுபதி பேசும் போது, " நான் என்னுடைய மகனை அப்பா என்றும், மகளை அம்மா என்றுதான் அழைப்பேன். அவர்கள் என்னை அதிகாரம் செய்வார்கள். நான் தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களை அவர்களோடு கலந்து கொள்வேன். இன்னும் குறிப்பாக படத்தில் ஏதேனும் சுவாரசியமான சீனை ஷூட் செய்தோம் என்றால், அதை அவர்களிடம் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்பேன். எந்த விஷயமாக இருந்தாலும் நான் அவர்களிடமும் நான் கருத்துகளை கேட்பேன். நான் அவர்களின் அப்பா என்ற பிம்பத்தை நான் உருவாக்க வில்லை. சில சமயங்களில் நான் தான் குடும்பத்தில் குழந்தை போன்று தெரியும்." என்று பேசினார்.
50 வது படம்
விஜய் சேதுபதியின் 50 வது படமாக கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் மகாராஜா. இ ந்தப் படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். மக்களிடம் நல்ல வரவரவேற்பை பெற்ற இந்தப்படம், 80 கோடியை தாண்டி வசல் செய்ததாக சொல்லப்படுகிறது.