Vijay and Rashmika: நீருக்குள் இருந்த விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா: ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த மிருணாள் தாக்கூர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay And Rashmika: நீருக்குள் இருந்த விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா: ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த மிருணாள் தாக்கூர்

Vijay and Rashmika: நீருக்குள் இருந்த விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா: ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த மிருணாள் தாக்கூர்

Marimuthu M HT Tamil Published Nov 30, 2023 06:13 PM IST
Marimuthu M HT Tamil
Published Nov 30, 2023 06:13 PM IST

சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நட்புப் பற்றி, ஹாய் நானா படக்குழுவினர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாய் நானா திரைப்பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் விடுமுறை படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஹாய் நானா திரைப்பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் விடுமுறை படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன

என்ன நடந்தது?

ஹாய் நானா திரைப்பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் தொகுப்பாளர் சுமா ரசிகர்களை வெறித்தனமாகத் தூண்டிவிட்டார். திடீரென்று விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் த்ரோபேக் படங்கள் திரையில் காட்டப்பட்டன. இந்தப் படங்களைக் காட்டி மிருணாள் தாக்கூர், நானி ஆகியோர் ஆச்சரியமாக சிரித்தனர். சுமா தன் அருகில் இருக்கும் ஒரு புகைப்படக் கலைஞரைப் பார்த்ததும், பாலியில் நடிகை ராஷ்மிகாவை கிளிக் செய்தவன் நீயா என்று கேலியாகக் கேட்டார். தனி மனிதரின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாமல் இதுபோன்ற படங்களைக் கிளிக் செய்ய முடியுமா என்றும் அவர் கேட்டார்.

ரசிகர்கள் எரிச்சல்:

ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இதையே 'மலிவான விளம்பர ஸ்டண்ட்' என்று அழைத்தனர்

பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கொண்டு வருவதற்காக, ஒரு நிகழ்வில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டு வருவது சரியல்ல என்று மற்றொருவர் கூறினார். இதுகுறித்து அவர், “HiNanna குழுவின் மலிவான விளம்பர ஸ்டண்ட்கள்.  #விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் நிகழ்வுகளை விளம்பரம் செய்வது தவறானது’ என விமர்சித்தனர்.

பிரபலங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை

விஜய், ராஷ்மிகா ஆகியோர் சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. விஜய் மற்றும் ராஷ்மிகாவின் படங்களைப் பயன்படுத்துவதற்கு முன், ஏற்பாட்டாளர்களோ அல்லது படக்குழுவும் அவர்களிடம் அனுமதி பெற்றதா என்பதும் தெரியவில்லை.