'அந்த அளவு காதல்.. நான் அரசனானால் அனிருத்தை கடத்தி விடுவேன்..' சம்பவம் செய்த விஜய் தேவரகொண்டா..
நான் மட்டும் அரசனாக இருந்தால் இசையமைப்பாளர் அனிருத்தை கடத்தி கொண்டு போய் வைத்து, என் படங்களுக்கு மட்டும் இசையமைக்குமாறு கூறுவேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா விளையாட்டாக பேசியுள்ளார்.

'அந்த அளவு காதல்.. நான் அரசனானால் அனிருத்தை கடத்தி விடுவேன்..' சம்பவம் செய்த விஜய் தேவரகொண்டா..
நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கனவு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சியில் திளைக்கிறார். கிங்டம் படத்தின் புரொமோஷனுக்காக சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில், அவர் பல ஆண்டுகளாக அனிருத் உடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டு வந்ததாகவும், எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துக் கொண்டிருக்கும் போது கூட அனிருத்தின் இசையைக் கேட்டதாகவும் தெரிவித்தார்.
அனிருத் மீது காதல்
அனிருத் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து விஜய் கேட்கப்பட்ட போது, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பே அனிருத்தின் இசையை விரும்பி வந்ததாகக் கூறினார். அவர் கூறுகையில், “வி.ஐ.பி மற்றும் 3 படங்களைப் பார்த்ததும் அனிருத் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. இந்த மனிதர் யார்? இவர் சாதாரணமானவர் இல்லை.