புஷ்பா புருஷன் நான் இல்லைங்க.. கூட வந்தவர்.. புதுச்சேரி ஹோட்டலை விலைக்கு கேட்ட சர்ச்சை.. விளக்கமளித்த விக்னேஷ் சிவன்
புஷ்பா புருஷன் நான் இல்லைங்க.. கூட வந்தவர்.. புதுச்சேரி ஹோட்டலை விலைக்கு கேட்ட சர்ச்சை.. விளக்கமளித்த விக்னேஷ் சிவன் பற்றி பார்ப்போம்.
கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் வலம் வருகிறார்கள். தினமும் இவர்களைப் பற்றி ஏதாவது சர்ச்சைப் பேச்சுகள், உலவி லைம்லைட்டிலேயே இருந்து வருகின்றனர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு எதிராக, நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதில் கிடைத்த நெட்டிசன்களின் எதிர்வினையால் தனது எக்ஸ் தள அக்கவுண்டில் இருந்தே விக்னேஷ் சிவன் வெளியேறினார்.
இதையடுத்து சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஹோட்டலை இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக தகவல்கள் கிளம்பி, மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
உடனே நெட்டிசன்கள், ஒரு அரசு சொத்தினை விலைக்கு வாங்க முடியாது என்ற அடிப்படை அறிவுகூட விக்னேஷ் சிவனுக்குக் கிடையாது என வசைபாடினர், நெட்டிசன்கள்.
புஷ்பா புருஷன் என்ற விமர்சனம்:
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பற்றி திரை விமர்சகர் பிஸ்மியும் படுகேவலமாக விமர்சித்து இருந்தார். அதில், அவர் , ‘’நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரிக்கு போய் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டது எல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம். சினிமாவில் நயன்தாரா பல பிசினஸ் செய்கிறார்.
நயன் தாராவின் புருஷனான விக்னேஷ் சிவனும் பணத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு வேலையைப் பார்த்திருக்கிறார். விக்னேஷ் சிவனின் அடையாளமே நயன்தாராவின் புருஷன் என்பது தான். ஒரு படத்தில் கூட புஷ்பா புருஷன் செயல்படுவது போல், இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புருஷன் என்கின்ற வெளிச்சத்தை விசிட்டிங் கார்டாகவே பயன்படுத்தி இதுபோன்ற முட்டாள்தனத்தை செய்கின்றார்’’என விமர்சித்தார்.
விளக்கமளித்த விக்னேஷ் சிவன்:
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘’ புதுச்சேரி அரசின் சொத்தினை தான் விலைக்கு வாங்க முயற்சித்ததாக, என்னைப் பற்றி ஒரு கேவலமான செய்தி வலம் வந்துகொண்டு வருகிறது. அதற்குண்டான பதில் தான் இது.
நான் பாண்டிச்சேரிக்கு சென்றது அங்குள்ள ஏர்போர்ட்டை பார்த்து, என்னுடைய ‘லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பனி’ திரைப்படத்துக்கு சூட்டிங் அனுமதி பெறத்தான்.
இதுதொடர்பாக மரியாதை நிமித்தமாக, மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி அவர்களையும், புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்தேன். ஆனால், யாரும் எதிர்பார்க்காதவிதமாக, என்னுடன் வந்த அப்பகுதியைச் சார்ந்த ஒரு லோக்கல் மேனேஜர் சில விஷயங்களை அவருக்காக கேட்டார். அந்த மீட்டிங்கிற்குப் பின், அது என்னுடன் தவறுதலாக இணைத்து புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, என்னைப்பற்றி உருவான மீம்ஸ்களும் ஜோக்குகளும் உண்மையிலேயே நகைச்சுவையாக இருந்தன.
அந்த மீம்கள் இன்ஸ்பயரிங்காக இருந்தாலும், இது தேவையற்றது தான். இதைத்தான் நான் தெளிவுபடுத்தவிரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி'’ என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
முன்னதாக விக்னேஷ் சிவன் பற்றி உலவியது என்ன?:
புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாரயணனை சந்தித்த விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை விலை பேசியுள்ளாராம்.
அதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் ஒப்பந்த அடிப்படையில் அந்த ஹோட்டலை வாடகைக்கு தருவீர்களா? எனக் கேட்டதாக தகவல் பரவியது.
மேலும், புதுச்சேரியில் பல்வேறு கடற்கரை பகுதிகளில் இருக்கும் இடங்கள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்று கிடைக்குமா? என விக்னேஷ் சிவன் தரப்பில் கேட்கப்பட்டதாகவும், தற்போது எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் தெரிவித்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்