நான் பிறந்த தினமே… விக்னேஷ் சிவன் பகிர்ந்த சூப்பர் போட்டோ
நடிகை நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு இருந்து நிலையில் கடந்த மாதம், சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வரும் இந்த ஜோடி அங்கிருந்து ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவை கட்டி அணைத்துக் கொண்டு மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
அதில், "நான் பிறந்த தினமே என காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள, நான் பிழை பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளை குறிப்பிட்டுள்ளார்.
திருமண முடிந்த கையோடு அடுத்து நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படப்பிடிப்பில் ஷாருக்கானுடன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இப்படத்தில், நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார் என நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டாபிக்ஸ்