நெகட்டிவிட்டிய தள்ளி வைங்க! விக்கியின் புத்தாண்டு வாழ்த்து! புர்ஜ் கலிபாவில் கொண்டாட்டம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நெகட்டிவிட்டிய தள்ளி வைங்க! விக்கியின் புத்தாண்டு வாழ்த்து! புர்ஜ் கலிபாவில் கொண்டாட்டம்!

நெகட்டிவிட்டிய தள்ளி வைங்க! விக்கியின் புத்தாண்டு வாழ்த்து! புர்ஜ் கலிபாவில் கொண்டாட்டம்!

Suguna Devi P HT Tamil
Jan 01, 2025 04:49 PM IST

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களது புத்தாண்டு கொண்டாடத்தை புர்ஜ் கலிபாவின் முன் கொண்டாடியதாக போட்டோ வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெகட்டிவிட்டிய தள்ளி வைங்க! விக்கியின் புத்தாண்டு வாழ்த்து! புர்ஜ் கலிபாவில் கொண்டாட்டம்!
நெகட்டிவிட்டிய தள்ளி வைங்க! விக்கியின் புத்தாண்டு வாழ்த்து! புர்ஜ் கலிபாவில் கொண்டாட்டம்! (Instagram)

தொடர் சர்ச்சை 

 2024 முழுவதும் சர்ச்சைகளுக்கு குறையில்லாமல் இவர்கள் இருவரது வாழ்க்கையும் சென்றிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களது திருமண வீடியோ ஆனது அதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தான் அதற்கு முக்கிய காரணம். தனுஷ் அதற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் தொடர்ந்து இருந்தார். மேலும் நயன்தாரா தனுஷை குற்றம் சாட்டி இருந்தார். 

இதற்கு நெட்பிளிக்சில் திருமண வீடியோவை பல கோடிகளுக்கு பேரம் பேசி இருந்த நயன்தாராவால் தனுஷ் கேட்கும் தொகையை வழங்க முடியாதா? எனவும் பல நெட்டிசன்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கலாய்த்து வந்தனர். மேலும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் புதுச்சேரி அமைச்சரை சந்தித்தபோது அரசாங்க ஹோட்டலை விலைக்கு கேட்டதாகவும் தகவல் பரவியது.  மேலும் அந்த ஹோட்டலை அவர் விலைக்கு கேட்கவில்லை என அமைச்சர் விளக்கம் அளித்திருந்த போதிலும் அதனை நெட்டிசன்கள் யாரும் கண்டு கொள்வதாக இல்லை. தற்போது வரை விக்னேஷ் சிவனை கலாய்த்து கொண்டு உள்ளனர். 

ரஜினியைத் தெரியாது 

 மேலும் நயன்தாரா கொடுத்த ஒரு நேர்காணலில் ரஜினியை குறித்து தனக்கு தெரியாது எனவும் சந்திரமுகி படத்தின் போது அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாத காரணத்தாலேயே நான் நன்றாக நடித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் வலைப்பேச்சு அந்தணன் அவர்களின் youtube சேனலை குறிவைத்து மூன்று குரங்குகள் என்றும் சாடியிருந்தார். இவை இரண்டும் நயன்தாராவின் இமேஜை சமூக வலைதளங்களில் மிகவும் வெகுவாக பாதித்தது. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் பதிவிட்ட பதிவில் எதிர்மறை எண்ணங்களை கவனத்தில் கொள்ளாமல் காதல் மீது கவனம் செலுத்துவதே வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் என குறிப்பிட்டு பதிவு போட்டுள்ளார்.

இது குறித்தான அவரது பதிவில், "எங்கே காதல் இருக்கிறதோ அங்கு தான் மகிழ்ச்சி இருக்கிறது! 

உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அன்பில் கவனம் செலுத்துங்கள், வாழ்க்கையில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள், கடினமாக உழைப்பதில் கவனம் செலுத்துங்கள்! எல்லா எதிர்மறைகளையும் கவனத்தில் கொள்ளாமல் வைத்து, அதை உங்கள் வாழ்க்கையிலிருந்து மங்கலாக்குங்கள்!

உங்கள் ஆசீர்வாதங்களில் நம்பிக்கை மற்றும் உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருப்பது வெற்றியைத் தருவது மட்டுமல்லாமல், நிறைய திருப்தியையும் ஏராளமான மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த 2025  நீங்கள் விரும்பிய அனைத்தையும் கொடுங்கள்! எங்களிடமிருந்து உங்களுக்கு  மிகுந்த அன்பு" எனக் குறிப்பிட்டு இருந்தார். மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் மாதவன் குடும்பத்தினரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர் 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.