விட்டு பிடிக்குமா விடுதலை 2! வீக் எண்டில் தான் தெரியுமா? 7 ஆவது நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விட்டு பிடிக்குமா விடுதலை 2! வீக் எண்டில் தான் தெரியுமா? 7 ஆவது நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா?

விட்டு பிடிக்குமா விடுதலை 2! வீக் எண்டில் தான் தெரியுமா? 7 ஆவது நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா?

Suguna Devi P HT Tamil
Published Dec 27, 2024 08:02 AM IST

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்து வெளியான விடுதலை இரண்டாம் பாகம் படத்தின் 7 ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விட்டு பிடிக்குமா விடுதலை 2! வீக் எண்டில் தான் தெரியுமா? 7 ஆவது நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா?
விட்டு பிடிக்குமா விடுதலை 2! வீக் எண்டில் தான் தெரியுமா? 7 ஆவது நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிடும் டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 படம் வெளியான முதல் நாளில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ .7 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழில் ரூ.6.6 கோடியும், தெலுங்கில் ரூ.40 லட்சமும் வசூலித்ததாக தெரிகிறது. வார இறுதி நாட்களில் படத்திற்கான முன்பதிவு அதிகரித்து இருப்பினும் மீண்டும் வார நாட்களில் வசூல் வேகமாக குறையுமோ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்நிலையில் விடுதலை திரைப்படம் வெளியாகி 7ம் நாளான நேற்று, இந்தியா அளவில் மட்டும் ரூ.30.45 கோடி வசூலித்து உள்ளது. குறிப்பாக நேற்று மட்டும்  மொத்தமாக ரூ. 81 லட்ச ரூபாயும், தெலுங்கில் நேற்று ஒருநாளில் 10 லட்சம் வசூலித்து மொத்தமாக ரூ.2.01 கோடி வசூலித்ததாக தெரிகிறது. இதையடுத்து படம் வெளியான முதல் நாள் தற்போது வரை இந்திய அளவில் 31.95 கோடி ரூபாயே வசூலித்ததாகத் தெரிகிறது. 

விடுதலை 2 விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறனின் மிகப்பெரிய குறையாக அவரது டப்பிங் பணிகள் பார்க்கப்படுகிறது. ஏனெனில் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் வரை ஏதாவது ஒன்றை மாத்தி அமைத்துக் கொண்டே இருக்கிறார். இது படம் பார்க்கும் போது கதாபாத்திரத்தோடு பொருந்தாத வசனங்களை கொண்டு வருகிறது. இறுதி வரை அதிகமான காட்சிகள் எடுத்துக் கொண்டே இருப்பதால் படத்தின் எடிட்டிங் வேலையும் சரியாக செய்யப்படுவதில்லை. அது விடுதலை 2 படத்திலும் தொடர்ந்தது உண்மை. 

விடுதலை பாகம் 1 மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும்பாலான ரசிகர்களை ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது. படம் வெளியான முதல் நாளில், படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க சில காட்சிகளை நீக்கி இருக்கலாம். படத்தில் பல இடங்களில் வரும் வசனங்கள் நீளமாக இருக்கிறது. இது படத்தை தொய்வாக்குகிறது என பலரும் கூறி வந்தனர். இன்னும் சிலர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அரசியல் படமாக இது இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததற்காக நிச்சயம் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். அப்படி தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் அது அந்த விருதுக்கு தான் அசிங்கம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.