மனைவியோடு வேற மாறி ஆட்டம்.. வைரலான ராஜமௌலி வீடியோ.. என்ன எனர்ஜி.. பறக்கும் கமெண்டுகள்..
பாகுபலி இயக்குநர் ராஜமௌலி தன் மனைவியோடு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ வைரலாகி தீயாய் பரவி வருகிறது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது பிரம்மாண்டமான பாகுபலி எனும் படைப்பின் மூலம் பான்-இந்திய திரைப்படத்தின் முன்னோடியாக மாறினார். இதையடுத்து இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படமும் உலகளலில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து ஹிட் அடித்ததுடன் ஆஸ்கார் விருதுகளையும் வென்று இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தது.
வைரலாகும் ராஜமௌலி
இதையடுத்து இயக்குநர் ராஜமௌலி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத புள்ளியாக மாறினார். இவரது ஒவ்வொரு அசைவுகளையும் அவரது ரசிகர்கள் உற்று நோக்க வைத்துள்ளது. அப்படி இருக்கையில் தான் ராஜமௌலியின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், ராஜமௌலி அவரது மனைவி ரமாவுடன் இணைந்து ரவிதேஜா மற்றும் அசின் நடிப்பில் உருவான "லன்ச்கோஸ்தவா" என்ற தெலுங்கு பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர். தன் மனைவியுடன் ராஜமௌலி ஆடிய நடன அசைவுகளை பார்த்து அவரது ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
குடும்ப விழாவில் நடனம்
இந்த வீடியோ குறித்த விசாரணையின் போது தான், இது ராஜமௌலியின் குடும்ப திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதும், அவரது மருமகனான ஸ்ரீ சிம்ஹாவின் திருமணத்திற்கு முந்தைய சடங்கில் பங்கேற்று, ராஜமௌலி நடனமாடியதும் தெரியவந்தது.
இந்த வீடியோவை வேகமாக வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், ராஜமௌலி அற்புதமான இயக்குநர் மட்டுமல்ல அவர் அற்புதமான நடன கலைஞரும் கூட. அதனால் தான் அவர் தனது படத்தில் நாட்டு நாட்டு போன்ற பாட்டை வைத்து ஆஸ்கார் விருதை வென்றார் எனக் கூறி வருகின்றனர்.
நடன கலைஞர்
மேலும் ஒரு நபர், அவருக்குள் இருக்கும் ஆற்றல் குறையவே குறையாது.. என்ன ஒரு உத்வேகம் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜமௌலியும் ரமாவும் ஒரு குடும்ப திருமணத்தில் "அந்தமைனா பிரேமா ராணி" பாடலுக்கு நடனமாடிய வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜமௌலியின் அடுத்த படம்
ஆர்.ஆர்.ஆர் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்த ராஜமௌலி தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு வருகிறார். இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், ஸ்கிரிப்ட் வேலைகள் ஏற்கனவே முடிந்து விட்டதாக தெரிகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தப் படம் பாகுபலி படத்தைப் போல 2 பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டு உள்ளதாகவும், இதனால் படத்தின் பட்ஜெட் சுமார் 1000 கோடிகளை கடந்து உள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது. இது உண்மையா இல்லையா என்பது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியான பின்னர் தான் தெரியும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்