‘விக்ரமோட பெஸ்ட்ட தமிழ் சினிமா பாக்கல’ - விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன் பேச்சு!
நாங்கள் பாலுமகேந்திரா சாருடன் இணைந்து கதை நேரம், ஜூலி கணபதி உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்றினோம். அப்போதிலிருந்து விக்ரம் சுகுமாரன் என்னுடைய படைப்புகளில் மிகவும் நெருக்கமாக அவரது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். -வெற்றிமாறன் பேச்சு!

‘விக்ரமோட பெஸ்ட்ட தமிழ் சினிமா பாக்கல’ - விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன் பேச்சு!
மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான மதுரை பரமகுடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், சாந்தனு, கலையரசன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
முதல் நபர் விக்ரம்தான்.
அவரது இறப்பு குறித்து பேசிய வெற்றிமாறன், ‘நான் திரைத்துறையில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்த பொழுது என்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய முதல் நபர் விக்ரம்தான். சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் நட்பு விக்ரம் உடையது தான்.